tamilnadu

விழுப்புரம் மற்றும் வேலூர் முக்கிய செய்திகள்

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

விழுப்புரம்.மே.12-விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, மயிலம் அருகே உள்ள பெரமண்டூர் காலனியை சேர்ந்தவர் குபேரன். இவருடைய மகன் அஜித்குமார்(24). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் படித்த மாணவியை சம்பவத்தன்று வீட்டிலிருந்து அஜித்குமார், இவருடைய தம்பி ரஞ்சித்குமார் (20), நண்பரான குப்பன் மகன் சந்தோஷ் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளனர். இதை தடுத்த மாணவியின் பெற்றோரை தாக்கியுள்ளனர். இது குறித்து மாணவி யின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மயிலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக ரஞ்சித்குமார், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அஜித்குமாரையும், கடத்தப்பட்ட மாணவியையும் தேடி வந்தனர்.இந்த நிலையில் சென்னையிலிருந்த அஜித்குமாரையும், மாணவி யையும் பிடித்தனர். விசாரணையில் அஜித்குமார், அந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.


பள்ளி வாகன பாதுகாப்பு வசதிகளை தணிக்கை செய்யும் பணி 

வேலூர், மே 12- வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின்   வாகனங் களில் உள்ள பாதுகாப்பு வசதிகளை தணிக்கை செய்யும் பணி தொடங்கியது. ராணிப்பேட்டைவட்டார போக்குவரத்து துறை சார்பில் 122 பள்ளிகளில் உள்ள155 வாகனங்கள் ஆய்வு நடந்தது. ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் வாகன தணிக்கை நடந்தது. ராணிப்பேட்டை சாராட்சியர் இளம்பகவத் தலையில் நடந்த ஆய்வில்,வட்டாரப்போக்கு வரத்து அலுவலர் பாட்டப்பசாமி, காவல் துணைகண்காணிப்பாளர் கலைச்செல்வன்,போக்குவரத்து ஆய்வாளர்கள்சிவராஜ்,( அரக்கோணம்) சரவணன், தீயணிப்பு அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள்,மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு, உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.தமிழக அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, காவல், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கூட்டாய்வு செய்வது வழக்கம். இந்த ஆய்வின்போது வாகனத்தின் நிறம், பள்ளி குறித்த விவரம், தொடர்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளை பட்டைகளின் நிலை, அவசரக் கதவுகளின் செயல்பாடு, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, வாகனத்தின் படிக்கட்டுகள், வாகன ஓட்டுநரின் இருக்கை, வாகனத்தின் உட்புறம், தரைப்பலகை, ஜன்னல்கள், சிவப்பு, வெள்ளை பிரதிபலிப்பான், முதலுதவிப் பெட்டி, மருந்துகள், தீயணைக்கும் கருவி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவற்றின் நிலை குறித்தும் தணிக்கை செய்யப்படுகிறது. குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்களில் குறைகளை நிவர்த்தி செய்து, பள்ளி திறப்பதற்கு முன் மீண்டும் ஆய்வுக்கு சமர்ப்பித்து சான்று பெற்ற பின்புதான் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாகன ஓட்டுநர்கள் வாகனத்தை பரிசோதனை செய்த பிறகே இயக்க வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து, பேருந்தை இயக்கும்போது ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு உடனுக்குடன் அணைப்பது குறித்த தீயணைப்பு வீரர்கள் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.