tamilnadu

img

கிராம சபை கூட்டம்: ஸ்டாலின் மீது வழக்கு...

சென்னை:
தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடத்த அதிமுக அரசு திடீரென்று தடை விதித்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக கொரட்டூர், அகரவேல், நடுகுத்துவயல், புதுசத்திரம், காட்டுப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் 100 பேர் மட்டுமே முகக் கவசம் அணிந்தும் தனிமனித இடைவெளி விட்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக கூறி கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந் திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீது 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங் களை திரும்பப் பெறு என்ற வாசகம் அச்சிடப்பட்ட முகக்கவசம் அணிந்திருந்தபடி கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக நடத்திய செயற்குழு கூட்டத்தால் கொரோனா பரவாதா? என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக திமுக சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டும் அல்ல. அதிமுக சார்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்களும் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருந்தார்கள். அதனால்தான் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.