விக்கிரவாண்டி தொகுதி காலி இடமாக அறிவிப்பு
சென்னை, ஏப்.8- விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி வெள்ளிக்கிழமை யன்று (ஏப்.5) தேர் தல் பிரச்சார மேடை யில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தார். இதுகுறித்து விழுப்பு ரம் மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு சட்டப் பேரவை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்தி ருந்தார். அதைப் பெற்றுக்கொண்ட சட்டப்பேரவை செயலகம், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி யுள்ளது. அதில், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்ததால் அந்த தொகுதி காலி இடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 - ஊதியத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை
சென்னை, ஏப்.8- தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங் கள், கடைகள்,தொழிற் சாலைகளில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக் கும் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று ஊதி யத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழி லாளர் நலத் துறை ஆணையர் அதுல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, “மாநில ஒருங்கி ணைப்பாளர் தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன் (9445398801, 044-24335107), தொழிலாளர் உதவி ஆணையர்கள் வெங்கடாசலபதி - சென்னை முதல் வட்டம் (7010275131, 044-24330354), சுபாஷ் சந்திரன் - இரண் டாம் வட்டம் (8220613777, 044-24322749), சிவக்குமார் - மூன்றாம் வட்டம் (90435 55123, 044-24322750) ஆகியோரை தொடர்பு கொண்டு. தொழிலாளர்கள் - பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10இல் வெளியாகிறது!
சென்னை, ஏப்.8- தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு மார்ச் 26 அன்று தொடங்கிய பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8 அன்று நிறை வடைந்தது. இதை யடுத்து விடைத்தாள் கள் திருத்தும் பணி ஏப்ரல் 12 முதல் தொடங்கி 22 வரை நடைபெற உள்ளது. 88 மையங்களில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அதைத்தொடர்நது, மதிப் பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணி களை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியிடப் படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோடி இன்று ரோடு ஷோ: 20 நிபந்தனைகள்!
சென்னை, ஏப். 8- சென்னை தியாகராயர் நகரில் பிர தமர் மோடி இன்று நடத்தும் ‘ரோடு ஷோ’வுக்கு அனுமதி கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், 20 நிபந்தனை களை விதித்துள்ளது.
அதன்படி “தோல் பை, தண்ணீர் பாட்டில் போன்ற எளிதில் தூக்கி எறியக் கூடிய பொருட்களை பொதுமக்கள் கொண்டு வர அனுமதி இல்லை. மரத் தால் ஆன கைப்பிடியுடன் கூடிய பதாகை களை பொதுமக்கள் எடுத்து வரக் கூடாது. பிரதமர் மோடி பயணிக்கும் பாதையில் அலங்கார வளைவுகள் அமைக்கக் கூடாது. மத நம்பிக்கைக்கு எதிரான, வெறுப்புக் கருத்துகளுடன் முழக்கமிடக் கூடாது. தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது” என நிபந் தனை விதிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் தலைவர்கள் இன்றைய பிரச்சாரம்
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
மதுரை - முதல்வருடன் பிரச்சாரம்
உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர்
விருதுநகர்
அ.சவுந்தரராசன்
மூத்த தலைவர் - சிபிஐ(எம்)
தென்சென்னை
ரூ.50 ஆயிரம் எடுத்துச் செல்ல ஜூன் 4 வரை கட்டுப்பாடு
தலைமை தேர்தல் அதிகாரி
சென்னை, ஏப்.8- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது, “உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள், ஏப்ரல் 19 வாக்குப்பதிவு முடிந்த பிறகும், ஜூன் 4 வரை தொட ரும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ. 208 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இவை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டவை ஆகும். இவற்றில் தமிழகம் முழுவதும் ரொக்கப் பணம் மட்டும் ரூ. 88.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 4.53 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.4 கோடி பறிமுதல்: சிறப்பு குழு விசாரணை!
தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி சிக்கியது தொடர் பாக சிறப்புக்குழு விசாரணைக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரு மான வரித்துறைக்கு தகவல் தெரி வித்து அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் பிறகு இதில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். இந்தப் பணம் யாருடையது யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிற விவ ரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு தெரி யப்படுத்தப்படும்.
இவ்வாறு சத்யபிரதா சாகு தெரிவித் துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் இது வரை 2 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 559 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தனது பேட்டியில் சாகு தெரிவித்தார்.
கோவை தேர்தல் களத்தை செந்தில் பாலாஜி தான் இயக்குகிறார்... அண்ணாமலை புலம்பல்
கோயம்புத்தூர், ஏப்.8- கோவையில் இந்தியா கூட்டணி சார் பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கண பதி ராஜ்குமார் வெற்றி உறுதி செய் யப்பட்டு விட்டது. மூன்றாமிடம் வந்தாலே பெரிது என்ற அளவில் தான், பாஜக தலைவர் அண்ணாமலையின் நிலைமை உள்ளது. இதனால், தோல்விக்கு இப் போதே காரணங்களை கண்டுபிடிக்கத் துவங்கி விட்டார்.
இந்நிலையில் தான், கோவை சரவ ணம்பட்டி பகுதியில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்துள்ள அண்ணா மலை, “சிறையில் இருந்தாலும் செந்தில் பாலாஜி தான், கோவையின் தேர்தல் களத்தை இயக்கி வருவது தெளிவாக தெரிகிறது. கரூர் கம்பெனி ஆட்கள் என கூறுபவர்கள் வேலை செய்து வருகிறார் கள். அவர் சிறையில் இருந்து எழுதும் கதையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செயல்படுத்தி வருகிறார்” என்று புலம் பித் தவித்துள்ளார்.
கோவை தொகுதியில் பரவலான செல்வாக்கு கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீதும் பாய்ந்துள் ளார். “ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவுக்கு கமல் விற்றுவிட் டார்” என்று கோபத்தைக் காட்டியுள்ளார்.