வேலூர், ஜூன் 24- தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட 14-வது மாநாட் டிற்கு சங் கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவரும் ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலருத மான கோபால ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தித் தொடர்பா ளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கே.விஸ்வநாதன் வரவேற் றார். மாநில முன்னாள் பொருளாளர் செந்தமிழ்ச் செல்வன், மாநிலச் செய லாளர் சுப்பிரமணி ஆகி யோர் உரையாற்றினர். அறிவியல் மாற்றத்திற்கே, வரைவு புதிய கல்விக் கொள்கையின் விளைவு கள் குறித்து மாநில நிர்வா கக்குழு உறுப்பினர் என். மாதவன் சிறப்புரை யாற்றினார்.
பிரதிநிதிகள் மாநாட் டிற்கு மாவட்டத் தலைவர் பூபாலன் தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர் ப.இராமன், நல்லா சிரியை சி.புவனேஸ்வரி, இணைச் செயலாளர் எஸ். ஸ்ரீகாந்த், கோட்டச் செய லாளர் வே.பத்மநாபன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநில பொருளாளர் சுப்பிரமணி, மாநில செய லாளர் சேதுராமன், வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து. சிலுப்பன் ஆகியோர் உரையாற்றினர். புதிய கல்விக் கொள்கை குறித்தும் அதில் என் னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும் பொது கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அறிவியல் இயக்க நிர்வாகிகள் புதிய கல்விக் கொள்கையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விவாதித்தனர் மாவட்டத் தலைவராக க.பூபாலன், செயலாளராக எ.முத்துகிருஷ்ணன், பொரு ளாளர்-எ.ஜோசப் அன் னையா, செய்தித் தொடர் பாளராக செ.நா.ஜனார்த்த னன்,துணைத் தலை வர்களாக ராஜேந்திரன், ப.இராமன் சி.குணசேகரன் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.