வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதிய பாக்கி
வேலூர், ஜூலை 4- தமிழக துணைமுதல்வரின் கைவசம் உள்ள துறையான கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் 4 ஆயிரம் பேரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 826 வீட்டு வசதி சங்கங்கள் இயங்கி வந்தது. வாடகை, மின்கட்டணம் போன்ற செலவீனங்களால் தற்போது 180 சங்கங்கள் மட்டுமே இயங்கி வருவதாக துறை சார்ந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த துறையின் மூல மாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், தினக்கூலிகள், வியாபாரிகள் வீடு கட்டிக்கொள்வதற்கு சங்கத்தின் மூலமாக கடன் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக கடன் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த சங்கம் தற்போது முழுவதுமாக முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த துறையில் சுமார் 4,000 ஊழியர்கள் பணிபுரிகின்ற னர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்க ளில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்படி முற்றிலும் முடங்கும் அபாயத்தில் உள்ள இந்தத் துறை, தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஊதியம் வழங்கப்படாததால்ஊழியர்கள் தற்கொலை முடிவை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர். எனவே அந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதி யத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரண்பேடியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, ஜூலை. 4- துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து அதி முக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளத்தில் தமிழக அரசையும், தமிழர்களையும் அவ மதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குகூட்டணி கட்சிகள் சார்பில் கண்டனம் எழுப்பியதோடு, தமிழக சட்ட மன்றம், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து அதிமுக சார்பில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அசனா, பாஸ்கர், வையா புரிமணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்றவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர்.