tamilnadu

கடலூர் ,விழுப்புரம் ,வேலூர் முக்கிய செய்திகள்

கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில்  சரிந்து வரும் மாணவர் எண்ணிக்கை  

கடலூர், ஜூலை 27- கடலூர் மாவட்ட அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 35 விழுக்காடு மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் அதிகமாகவும், தனியார் பள்ளிகள் குறைவாகவும் உள்ள மாவட்டமாக கடலூர் மாவட்டம் விளங்கி வருகிறது. மாவட்டத்தில் குழந்தைகள் பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையில் மொத்தமாக 2,224 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அதிகபட்சமாக அரசுப் பள்ளிகள் துவக்க நிலை முதல் மேல் நிலைப்பள்ளிகள் வரையில் 1,429 உள்ளன. அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகள் 283 உள்ளன. தனியார் மெட்ரிக் பள்ளிகள் 138, நர்சரி பள்ளிகள் 264 மற்றும் சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகள் மீதமுள்ளவையாகும். மொத்தமுள்ள பள்ளிகளில் 64.25 சதவீதம் பள்ளிகள் அரசுப்பள்ளியாகவும், 12.72 சதவீதம் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளியாகவும் உள்ளன.  இந்நிலையில், நடப்பு 2019-20 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பான புள்ளி விபரம் வெளியாகி உள்ளது. இதில், மாவட்டத்தில் மொத்தம் 34,497 பேர் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள னர். இதில், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மொத்தம் 12,367 பேர் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 22,130 பேர் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.  அதாவது ஒன்றாம் வகுப்பு சேர்க்கை நடைபெற தகுதியுள்ள (நர்சரி, ப்ளே ஸ்கூல் தவிர) 1936 பள்ளிகளில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 1,712 ஆகும். ஆனால், மாணவர்கள் சேர்க்கையோ மிகக்குறைவாக 35.85 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. சராசரியாக ஒரு பள்ளியில் 14 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதிலும், அரசு பள்ளிகளை விட அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கூடுதலானவர்கள் சேர்ந்துள்ளதால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் நடப்பாண்டில் 23,810 பேர் சேர்ந்துள்ளனர். இதில், அரசால் நடு நிலைப்பள்ளியுடன் கூடிய 80 அங்கன்வாடி களில் துவங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 732 பேர் மட்டுமே சேர்ந்துள்ள னர். மீதமுள்ள 23,078 பேர் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தரமான கட்டடங்கள், பாடப்புத்தகம், சீருடை கள், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தரமான கல்வியையும், அவர்கள் எந்தச்சூழலையும் சமாளிக்கும் திறனையும் அரசுப்பள்ளிகள் கற்றுத்தருகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். விரைவில், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியிலேயே சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நிலையும் உருவாகும் என்றார்.

அரசு விடுமுறையில் சிறப்பு வகுப்பு: அதிகாரி எச்சரிக்கை

விழுப்புரம், ஜூலை 27- விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 137 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் மாவட்ட கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.  இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில், தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை நடத்த அங்கீகாரம் பெற்றுவிட்டு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை  மாணவர்களை சேர்த் துள்ள பள்ளிகள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15 ஆம் தேதிக்குள் வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் விதியை மீறி சேர்க்கப்பட்ட மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று சிஇஓ முனுசாமி தெரிவித்தார்.

குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் விரட்டியடிப்பு

வேலூர், ஜூலை 27- குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த 8 யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மழை பதிவானது. இந்நிலையில், குடியாத்தம் வனப்பகுதிக்கு உட்பட்ட பைலகுண்டா பகுதியில் இருந்து கொண்டபல்லி குடியிருப்பு பகுதியில் திடீரென 8 யானைகள் நுழைய முயன்றது.  அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடித்த னர்.

தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல்

விழுப்புரம், ஜூலை 27- விழுப்புரம் நகராட்சியில் மாம்பழப்பட்டு சாலையில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் அளவுக்கு அதிகமான தண்ணீர் உறிஞ்சப்பட்டு விழுப்புரம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இவ்வாறு அதிகளவு தண்ணீரை உறிஞ்சுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால், அந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினர். இந்த புகாரின் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடந்த மாதம் விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது என்று ஆய்வு  செய்தனர். ஆய்வில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலை யம் விழுப்புரம் நகராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அலுவலகங்க ளில் முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து அதிகமாக தண்ணீர் உறிஞ்சி வணிக மேம்பாட்டிற்கு பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து  கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையில், தாசில்தார் (பொறுப்பு) செல்வராஜ், மண்டல துணை தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் சாதிக் ஆகியோர் சென்று அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.