tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

சாலை விபத்தில்  2 தொழிலாளர்கள் பலி

வேலூர், ஆக. 5- வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர்  சென்னப்பன் (30). ஓட்டுனரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரையிலிருந்து கோழிகளை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் சென்றார். அவருடன் திருப்பத்தூ ரைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் விஜய் (26), அருண் (13) ஆகியோரும் சென்றனர். திருப்பத்தூர் அந்நனேரியில் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மினிலாரி மோதியது. இதில் மினிலாரி யின் முன்பக்கம் அமர்ந்திருந்த விஜய், அருண் இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுக்கா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்  

வேலூர், ஆக. 5- கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு 50 காலி வேகன்கள் கொண்ட சரக்கு ரயில்  புறப்பட்டது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே  பக்கிரி தக்கா என்ற இடத்திற்கு வந்தபோது 10ஆவது பெட்டி தடம் புரண்டது. இதையடுத்து 150 ரயில்வே ஊழியர்கள் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலும் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் கிரேன் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை மீட்டு,  தண்டவாளத்தையும் சரி செய்தனர். இதனால் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை சென்ற தன்பாத், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

ரிசர்வ் வங்கிக்கு பணம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் மீது பேருந்து மோதல்

வேலூர், ஆக. 5- கர்நாடக மாநிலம் மைசூர் ரிசர்வ் வங்கியில் இருந்து பணம்  ஏற்றிக் கொண்டு 2 கண்டெய்னர் லாரிகள் சென்னை ரிசர்வ்  வங்கிக்குச் சென்று கொண்டிருந்தன. லாரிக்கு பாதுகாப்பாக  மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவல்துறையினர் சென்றனர். பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டி ருக்கும் போது, கண்டெய்னர் லாரிகளை, தனியார் பேருந்து  முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரிக்கு லேசான சேதம் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநருக்கும், லாரி ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பணம் ஏற்றிச் சென்ற இரு கண்  டெய்னர் லாரிகளும் தேசிய நெடுஞ்சாலையில் நின்றன. அப்போது அவ்வழியாக தேர்தல் பணிக்காகச் சென்ற மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் சம்பவம் குறித்து விசா ரணை நடத்தினார். பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு  செய்யுமாறு பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு உத்தர விட்டார். மேலும், பணத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  கண்டெய்னர் லாரிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.