tamilnadu

விழுப்புரம் மற்றும் வேலூர் முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை வழங்கவில்லை:  கிராம சபையில் புகார்

விழுப்புரம், ஜூன் 28- விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபைக்  கூட்டங்கள் நடைபெற்றன. விக்கிரவாண்டி ஒன்றியத்திற் குட்பட்ட முண்டியம் பாக்கம் ஊராட்சியில் நடை பெற்ற  கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மனு கொடுத்தார். அதில் 2019ஆம் ஆண்டில் இதுவரை நூறு நாள் வேலை  திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கப்பட வில்லை. இந்த ஒன்றியத்தில் பல கிராமங்களிள் நூறு நாள்  வேலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் முண்டியம்  பாக்கம் கிராமத்தில் வேலை தொடங்கப்படவில்லை. எனவே  உடனடியாக நூறு நாள் வேலை திட்டத்தை தொடங்கி வேலை வழங்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

தாழ்வான வீடுகளில் புகுந்த கழிவுநீர்

வேலூர், ஜூன் 28- வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை சாமுண்டிபுரத்தில் 250க்கும் அதிகமான குடியிருப்பு கள் உள்ளன. குடியாத்தம் நகராட்சி எல்லையான நெல்லூர்பேட்டை ஏரி அருகே தொடங்கும் கழிவுநீர்க் கால்வாய் இப்பகுதி வழியாகச் செல்கிறது. இந்த கால்வாயை  சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளதால், கால்வாயில்  கழிவுநீர் செல்ல முடியாமல் சாமுண்டிபுரத்தில் உள்ள தெருக்க ளில் தேங்கி நிற்கிறது. மழைக் காலங்களில் அப்பகுதியில் உள்ள தாழ்வான வீடுகளில் கழிவுநீர் உள்ளே செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக வும், அதற்குக் காரணமான கழிவுநீர்க் கால்வாயை தூர்  வாரிச் சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பொதுப்  பணித்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக  வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர்.  ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த 250க்கும்  மேற்பட்டோர் பேர்ணாம்பட்டு சாலையில், நெல்லூர்பேட்டை காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் கே.சாமிநாதன் தலைமையில் மறியலில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சி யர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், காவல்  துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அந்தக் கால்வாயினை பார்வையிட்ட அதிகாரிகள் கால்வாயை  தூர் வார உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

வேலூரில் குடிநீர் தட்டுப்பாடு: செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு கட்டாய விடுமுறை

வேலூர், ஜூன் 28- வேலூர் அருகே அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு செவிலியர் கல்லூரியும் உள்ளது. இங்கு குடிநீர் விநியோ கம் செய்ய அமைக்கப்பட்ட 11 ஆழ்துளை  கிணறுகள், தற்போது நீரின்றி வறண்டுள்ளன.  மாவட்டத்தில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி, சமாளித்து வந்தனர். போதிய நிதி இல்லாததால், லாரிகளில் வாங்கும் நீரை அறுவை சிகிச்சை நடக்கும் தியேட்டர்களுக்கு மட்டும் பயன்படுத்த அனு மதி வழங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் தண்ணீர் வாங்கிக்  கொள்ள மருத்துவமனை நிர்வாகம் உத்தர விட்டது. வார்டுகளில் உள்ள நோயாளிகள், அவர்களுடன் உள்ளவர்கள், தண்ணீர் தேவைக்கு தாங்களே ஏற்பாடு செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறி விட்டனர். இந்நிலையில் செவிலியர்கள் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவிகளில், சீனியர் மாணவிகள் 30 பேரை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுமுறையில் செல்லுமாறு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் அவரவர் ஊர்களுக்குச் சென்று விட்டனர். தண்ணீர் பிரச்சனை தீர்ந்ததும், தாங்கள் தெரிவித்த பிறகே வரும்படியும், சொந்த பிரச்சனைகளுக்காக, விடுமுறையில் செல்வ தாக அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. இது குறித்து, மருத்துவக் கல்லூரி டீன், செல்வியை தொடர்பு கொள்ள  முயன்ற போது, அவர் ரவுண்ட்ஸ் சென்றிருக்கி றார் என்ற பதிலே திரும்பத், திரும்ப தெரி விக்கப்பட்டது