சென்னை,பிப், 28- வீராணம் ஏரி வறண்டு விட்டதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டு ப்பாடு ஏற்பட்டு, மக்கள் தண்ணீருக் காக அவதிப்படுவதை பார்த்து வரு கிறோம். இதில், சென்னை மாவட்ட பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை கூடிவரும் நிலையில், அவர்களுக்கான குடிநீர் தட்டுப்பாடும் பெருகி வருகிறது.இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன் னரே, சென்னை மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீரா ணம் ஏரி வறண்டு, ஏரியின் கொள்ள ளவு 38.85 அடியாக குறைந்துள்ளது.
தண்ணீர் நிறுத்தம்
இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி புதனன்று (பிப்.28) முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, காவேரி டெல்டா பாசன விவசாயிகளின் உயிர்நாடி யாக விளங்கி வருகிறது. இந்த ஏரியைச் சுற்றி சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பாட்டில் உள்ளன. மொத்த கொள்ளளவாக 47.50 அடியைக் கொண்டுள்ள வீரா ணம் ஏரி, தற்போது நீர்வரத்து இல்லாத தால், நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து, புதன்கிழமை ஏரியின் கொள்ளளவு 38.85 அடியாக குறைந்துள்ளது.
இதையடுத்து, இந்த ஏரியில் இருந்து சென்னை மாவட்ட பகுதி களுக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில், நீர்மட்டம் முற்றிலும் குறைந்ததன் காரணமாக, ஏரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.இந்நிலையில், தற்போது சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், நெய்வேலியில் இருந்து வெளி யேற்றப்படும் உபரி நீர், வாலாஜா ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பும் பணிகள் பொதுப்பணித்துறை அதி காரிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வீராணம்ஏரியில் 38.85 அடி தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் கூறினாலும் தண்ணீரின்றி ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. ஏரியை முழுமையாக தூர்வாரி னால், சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி பாதிக்காமல் இருக்கும் எனவும், மேலும் விவசாயப் பணிகளுக்கும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கும். கோடை காலத்தில் 100 நாள் திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரினால் அடுத்த பருவ மழையின் போது அல்லது காவிரி யிலிருந்து வரும் தண்ணீரை அதிகள வில் தேக்கி வைக்க முடியும் என்று பொது மக்கள் கூறினார்கள்.