tamilnadu

img

வந்தே பாரத் ரயில் உற்பத்தி தனியார் வசம்

சென்னை, ஜன. 6- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  ரயில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் வழங்குவதைக் கண்டித்து டிஆர்இயு சார்பில் ஊர்வலம்,  கூட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர்  அ.ஜானகிராமன்,  பொருளா ளர் எதுகிரி, ஆர்.இளங்கோ வன், முருகேசன் (டிஆர்பியூ), எஸ்.ராமலிங் கம், பா.ராஜாராமன், சத்ய மூர்த்தி (ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஜானகி ராமன் கூறுகையில், “வந்தே  பாரத் ரயில், ரயில் உற்பத்தி  தொழிற்சாலை  ஐசிஎப்-இல்  ரூ.104.35 கோடி விலையில்  உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ரூ.129 கோடி  ரூபாய்க்கு தயாரிக்க தனி யாரிடம் ஒப்படைக்கப்படுகி றது”என்றார். 200 வந்தே பாரத் ரயில்  உற்பத்தி மற்றும் பரா மரிப்பு ரஷ்யாவின் டிஎம்எச்,  டிஐடிஏஜிஏஆர்எச் (TMH, TITAGARH) கார்ப்ப ரேட்டுகளுக்கு உற்பத்தி மற்றும் 35 வருட பராமரிப்பு ரூ. 58,000 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கார்ப்பரேட்டுகளிடம் வழங்குவதால்  65,510 ரயில் வேயின் புதிய வேலை வாய்ப்புகள் (ஓபிசி, எஸ்சி,  எஸ்டி உள்ளிட்ட) பறிபோகும். ரயில்வேயின் 9 உற்பத்தி தொழிற்சாலைகள் ஆண்டுக்கு 10,000 கோச் உற்பத்தி மற்றும் 1000 லோக் கோமோட்டிவ் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தனியார் கார்ப்பரேட்டுகளை விட குறைந்த செலவில் ஐசிஎப்-இல் தயாரிக்கும் போது தனியாரிடம் ஏன்  ஒப்படைக்க வேண்டும். ஒன்றிய அரசு உடனடியாக  தனியார்மய நடவடிக் கையை கைவிட வேண்டும். இல்லையென்றால் அனைத்து தொழிற்சங்கங் களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக கேரேஜ் பிரதான நுழைவு வாயில் அருகில்  இருந்து ஊர்வலம் துவங்கி, வில்லிவாக்கம் ரயில் நிலையம் வரை நடைபெற்றது.