தாம்பரம், அக். 25- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பூங்காவாகவும் மற்றும் உள்நாட்டு வெளி நாட்டு பயணிகளுக்கு புகழ்பெற்ற சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. தற்போது 14 விலங்கு இனங்களை 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பில் காண இயலும், இதுவரை 3.5 கோடி பேர் உலகெங்கு மிருந்தும் கண்டுகளித்துள்ள னர். 30 ஆண்டுகளுக்கு பின் காண்டாமிருகத்தை விலங்கு பரிமாற்ற முறையில் பெற்று அதிக பார்வையாளர்ளை கவர்ந்துள்ளது. காண்டா மிருக விலங்கு இருப்பி டத்தை கடந்த மாதம் 10ஆம் தேதி பார்வையாளர்கள் காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டது. காண்டா மிருக இணையை அதன் இருப்பிடத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின் மூலம் காணும் வசதியை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது. இதன்மூலம் உலகில் எங்கிருந்தும் பூங்காவி னுள்ள காண்டாமிருகத்தை பூங்கா இணையதளமான www.aazp.in-இல் சனிக் கிழமை (அக். 26) முதல் கண்டுகளிக்கலாம்.