சென்னை, ஏப்.25- தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அடை யாளச் சான்று வழங்கும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை சரி செய்ய மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. வில்சன், பொதுச் செயலா ளர் பா. ஜான்சி ராணி ஆகியோர் விடுத்தி ருக்கும் அறிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநக ரங்களிலும், சில மாவட்டங்களில் கோட்ட அளவிலும் குறிப்பிட்ட நாட்க ளில் அரசு மருத்துவமனைகளில் “மாற்றுத் திறனாளி சான்று” வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.
சான்று பெற்றிராத மாற்றுத் திற னாளிகளுக்கு புதிதாகவும்; காலாவதி யான, தொலைந்துபோன பழைய சான்றுகளுக்கு பதிலாக மாற்றுச் சான்றுகளும் இங்கு வழங்கப்பட்டு வரு கின்றன. மருத்துவத்துறையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இத்திட்டத்தை செயல்படுத்து கிறது.
நிறுத்திவைப்பு
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மக்களவைத் தேர்தல் தேதி அறி விக்கப்பட்டதில் இருந்து சென்னை உட்பட மிகப் பெரும்பாலான மாவட் டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிதாக சான்று வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தேர்தல் நடத்தை விதிகளே காரணம் என பொய்யாகக் கூறி மாற்றுத் திற னாளிகளை மாவட்ட மாற்றுத் திற னாளிகள் நலத்துறை அதிகாரிகள் ஏமாற்றி அலைக்கழித்து வருகின்றனர்.
மதுரை - தூத்துக்குடி
இத்தேர்தல் காலத்திலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாரந்தோறும் திங்கள், வியாழன், உசி லம்பட்டியில் முதல் மற்றும் மூன்றா வது திங்கள்; திருமங்கலத்தில் மாதந் தோறும் முதல் செவ்வாய்; மேலூரில் மாதந்தோறும் முதல் புதன்- கிழமை களில் தாலுகா மருத்துவமனைகளில் தொடர்ந்து அடையாளச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
அதே போன்று, தூத்துக்குடியில் வியாழன், கோவில்பட்டியில் செவ் வாய், திருச்செந்தூரில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அடை யாளச் சான்று வழங்கப்படுகிறது.
அதிகாரி உறுதி
இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநரை சங்கத்தின் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி தொடர்புகொண்டபோது, “தான், கர் நாடகத்தில் தேர்தல் பணியில் இருப்ப தாகவும், மாவட்டங்களில் இத்திட்டம் நிறுத்தப்பட்டிருந்தால் தவறு என்றும்; தலையீடு செய்கிறேன்” என்றும் தெரி வித்துள்ளார்.
எனவே, நடைமுறையில் உள்ள இத்திட்டத்தை சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ள மாவட்ட அதிகாரி களுக்கு கடும் கண்டனங்களை தெரி வித்துக் கொள்வதுடன், இத்திட்டத்தை தொடர்ந்திட உயர் அதிகாரிகள் தலை யீடு செய்ய வேண்டும் வலியுறுத்து கிறோம்.எனவே, நடைமுறையில் உள்ள இத்திட்டத்தை சட்டவிரோதமாக நிறுத்தி வைத்துள்ள மாவட்ட அதிகாரி களுக்கு கடும் கண்டனங்களை தெரி வித்துக் கொள்வதுடன், இத்திட்டத்தை தொடர்ந்திட உயர் அதிகாரிகள் தலை யீடு செய்ய வேண்டும் வலியுறுத்து கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.