2023- ஆம் ஆண்டு 10, 12 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வி யடைந்த மாணவர்களில் 50 சதவீதம் பேர் மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா மாநிலங்கள் நடத்தும் தேர்வு வாரியங்கள் மூலம் பயின்றவர்கள், சிபிஎஸ்இ- பாடத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) — ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் (Ministry of Education) நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
அந்தந்த மாநிலங்களில் உள்ள பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட பகுப்பாய்வில், நாடு முழுவதும் உள்ள மொத்தம் 59 பள்ளி வாரியங்கள் மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை ஒன்றிய அரசு பகுப்பாய்வு செய்துள்ளது. இந்த 59 வாரி யங்களில் மூன்று தேசிய அளவிலான வாரியங்கள்.
மத்திய அரசு வாரியத்தின் தேர்வு எழுதிய வர்களில் 10-ஆம் வகுப்பு மாணவர் தோல்வி 6 சதவீதம். மாநில கல்வி வாரியங்களில் தோல்வி 16 சதவீதமாகவும் உள்ளது. மத்திய அரசு தேர்வு வாரியத்தின் மூலம் 12- ஆம் வகுப்பு மாண வர்கள் தோல்வி 12 சதவீதம். மாநில வாரியங் களில் தோல்வி 18 சதவீதமாக உள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வுகளில் தோல்வி யடையும் மாணவர்களில் 56 சதவீதம் பேர் மத்தியப்பிரேதசம், குஜராத், உத்தரப்பிர தேசம், பீகார், ஆந்திரம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மத்தியப் பிரேதசம், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் சிபிஎஸ்சி பாடப்பிரிவில் படித்தவர்கள்.
நாடு முழுவதும் ஒரே கல்வியை தேசியக் கல்விக்கொள்கை என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு ஒன்றிய அரசு திணிக்க முயற்சிக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை திணிப்பதற்கு ஏதுவாக ஒன்றிய அரசு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையை திணிப்பதன் மூலம் பல்வேறு வாரியங்களை தரப்படுத்த முடியும் என்றும் ஜேஇஇ, நீட், சியூஇடி (JEE, NEET, CUET) போன்ற தேசிய அளவிலான போட்டி நுழைவுத் தேர்வுகளுக்கு அனைவரையும் தயாராவார்கள் என்றும் வாதிடுகிறது ஒன்றிய அரசு.59 பள்ளி வாரியங்களில், 41 இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான வாரியங்கள் பொதுவாக உள்ளன.
ஆறு மாநிலங்கள் அதாவது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்கள் தங்கள் சொந்த பாடத்திட்டத்தை (NCERT அல்ல) பின்பற்றுகின்றன.
தவிர தேர்வு நடத்தும் முறைகளிலும் மாறுதல் உள்ளது. உதாரணத்திற்கு 10- ஆம் வகுப்பு தேர்வை நடத்த பீகார் தேர்வு வாரியம் - 8 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. மத்திய அரசு சிபிஎஸ்இ 34 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. 12-ஆம் வகுப்புக்கு பீகார்- 10 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. சிபிஎஸ்இ 10 நாட்கள் முதல் 63 நாட்கள் வரை எடுத்துக்காட்டுகிறது.
ஒன்றிய அமைச்சகத்தின் தகவல்படி கடந்த ஆண்டு வரை 60 பள்ளி வாரியங்கள் இருந்தன. கர்நாடக அரசு 2023- ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி வாரியம் மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்துடன் இணைத்துவிட்டது. இதனால் வாரியங்களின் எண்ணிக்கை 59-ஆகக் குறைந்துள்ளது.
தேசியகல்விக் கொள்கையை திணிப்பதே நோக்கம்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி சதவீதம் குறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், “தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதற்கு தடையாக (சவாலாக) 59 தேர்வு வாரியங்கள் உள்ளன.
எனவே நாங்கள் 59 வெவ்வேறு பள்ளி வாரியங்களுடன் இணைந்து செயல்படுவது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வியுற்ற மாநிலங்களுக்கு, தற்போதுள்ள சூழ்நிலையை மேம்படுத்து வதற்கான உத்திகளைக் கொண்டு வர மாநிலங்களுக்கு இந்தப் பகுப்பாய்வை பரிந்து ரைத்துள்ளோம். அவர்களில் சிலர் கர்நாடகா மாநிலம் போன்று ஒன்றிணைப்பார்கள் என்றார்.
கர்நாடகத்தில் நடப்பதென்ன?
கர்நாடகா மாநில வாரியம் 10-ஆம் வகுப்புக்கான வாரியத் தேர்வை நடத்துகிறது. மாணவர்கள் 10 ஆம் தேர்வை முடித்தவுடன். 11 ஆம் வகுப்பு முடித்து 12-ஆம் வகுப்பிற்கு செல்கிறார்கள். 12-ஆம் வகுப்புத் தேர்வை (PUC) கர்நாடாக மாநில பல்கலைக்கழக கல்வித் துறை தேர்வை நடத்துகிறது.
10, 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாண வர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது ஆய்வின்படி, சுமார் 33.5 லட்சம் 10-ஆம் வகுப்பு மாணவர்களில் 5.5 லட்சம் பேர் தேர்வெழுத வரவில்லை. 28 லட்சம் பேர் தோல்வியடைந்தவர்கள்.
12 ஆம் வகுப்பில், சுமார் 32.4 லட்சம் மாண வர்களில் 5.2 லட்சம் பேர் தேர்வெழுத வர வில்லை. 27.2 லட்சம் பேர் தோல்வியடைந்தவர்கள்.
மாநில வாரிய தேர்வில் தேர்ச்சி 86 சதவீதம்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் களில், 14 சதவீதம் பேர் மத்திய தேர்வு வாரி யங்களையும், 86 சதவீதம் பேர் மாநில வாரியங் களையும் சேர்ந்தவர்கள். 12 ஆம் வகுப்பைப் பொறுத்தவரை 12 சதவீதம் பேர் மத்திய வாரி யங்களையும் 86 சதவீதம் பேர் மாநில வாரியங் களையும் சேர்ந்தவர்கள்.
அறிவியலைத் தேர்ந்தெடுக்கும் மாணவி களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கலை/மனிதநேயப் பாடப்பிரிவை அதிக மாணவிகள் தேர்வு செய்கின்றனர். அறிவியல் பாடத்தை ஆண் மாணவர்கள் அதிகளவு தேர்வு செய்கின்றனர்.
2023- ஆம் ஆண்டு 25.04 சதவீத மாணவி கள், 29.8 சதவீத மாணவர்கள் அறிவியல் பாடப் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர். கலைப் பிரி வில் சேர்ந்த மாணவிகள் 28.3 சதவீதம். மாண வர்கள் 21.12 சதவீதம்.
அறிவியல் பாடப்பிரிவில் மாநில நிலை
மாநில அளவில் அதிக எண்ணிக்கையிலான அறிவியல் மாணவர்களைக் கொண்ட மாநி லங்கள்: ஆந்திரப் பிரதேசம் (77.97%), மணிப்பூர் (68.43%), தமிழ்நாடு (65.94%), தெலுங்கானா (65.05%), உத்தரப்பிரதேசம் (62.02%) ஆகியவை அடங்கும்.
குறைந்தளவு சேரும் மாணவ-மாணவிகள்: மேகாலயா (11.38%), திரிபுரா (12.83%), மேற்கு வங்கம் (14.61%), நாகாலாந்து (15.75%), பஞ்சாப் (16.35%).
ஒரே மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் செயல்திறனில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
இத்தகைய பின்னணியில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மிகவும் நுட்பமாக ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு மீண்டும் வலியுறுத்தி யுள்ளது. இது குறித்த தகவல் ஒன்றியக் கல்வி அமைச்சகத்திடமிருந்து சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளது
ஆனால், ஒன்றிய அரசு சூசகமாக பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டுமெனில் தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டுமென மறைமுகமாக வற்புறுத்துகிறது என விபரங்கள் தெரிவிக் கின்றன.