tamilnadu

கோடையில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் உத்தரவு

சென்னை, மார்ச் 2 - கோடைக் காலத்தில், தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை குறித்தும், தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். 

அதைத்தொடர்ந்து, மார்ச் மற்றும் ஏப்ரல் மாத உச்சபட்ச மின் தேவை முறையே 18 ஆயிரம் மெகா வாட் மற்றும் 19,900 மெகாவாட் வரை எட்டும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், மின் வாரியம் மூலம் உற்பத்தி செய்யப்படும் 15,093 மெகாவாட் மின்சாரம் தவிர,  மீதமுள்ள மின் தேவையை மார்ச் மாதத்தில் 3,571 மெகாவாட் மற்றும் ஏப்ரலில் 4,321 மெகாவாட் என வெளிச்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் மூலம் மின்சாரம் பெறப்படும்; இதன் மூலம், மாநிலத்தின் கோடைக்கால மின் தேவை முழுமையாக பூர்த்தி செய் யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் முடியும் வரை மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ள வேண் டாம் என தலைமைப் பொறியாளர்க ளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். ‘மின்னகம்’ மூலம் பொதுமக்களி டம் இருந்து பெறப்படும் புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.