tamilnadu

வேலை இல்லா விரக்தி: இளைஞர் தற்கொலை

காஞ்சிபுரம், ஜன.17- காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பெரிய ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் நீரில் மிதப்பதாக  காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ  இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலர்களின் விசாரணையில் இறந்தவர் இறந்தவர் பெயர்  வெங்கடேசன் என்பதும், வேலூர் மாவட்டம் கம்ம வன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. வேலையில்லாத காரணத்தால் மன உளைச்சலில் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை யினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும் இது தொடர்பாக திருப்பெரும்புதூர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;