tamilnadu

img

சிறுபான்மையினர் தாக்கப்படுவார்கள் என டி.வி. விவாதத்தில் பாஜக பகிரங்க மிரட்டல்... மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்...

சென்னை:
சிறுபான்மையினர்கள் தாக்கப்படுவார்கள் என  தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக நிர்வாகி  பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பதற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மக்கள்ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்  அருணன், க. உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் “இந்து மதத்தை விமர்சித்தால் அதனால் முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு ஆளாவார்கள்” என்று தமிழக பாஜக பிரதிநிதி பேசியிருக்கிறார். இப்படியாக தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுத்து, மதக் கலவரத்தை தூண்டும் பாஜகவின் கேடுகெட்ட நோக்கம் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு மதத்தை அந்த மதத்தவரே விமர்சித்தால் அதற்காக அடுத்த மதத்தவரைத் தாக்குவது என்ன வகைநியாயம்? இது தமிழகத்தின் சிறுபான்மையோரை பணயக் கைதிகளாகப் பாவித்து,அவர்களை மிரட்டும் மாபெரும் அநீதி.நடந்தது இந்து மதத்தின் மீதான விமர்சனமும் அல்ல, பாஜக அரசு மீதான விமர்சனம்.அதைத்தான் இந்து மதத்தின் மீதான விமர்சனம் என்று திரிக்கிறார்கள். “இந்துக்களுக்காக இருப்பதாகச் சொல்லும் பாஜக, மருத்துவக் கல்வியில் ஒபிசி இந்துக்களின் இடஒதுக்கீட்டைப் பறித்தது ஏன்?” எனும் கேள்வி எழுப்பப்பட்ட போதே இப்படி பாஜககாரரால் பதில் தரப்பட்டது. விஷயம்இந்து மதத்தின் பெயரைச் சொல்லிபாஜக மநுவாதிகள் ஒபிசி இந்துக்களின் உரிமையைப் பறிக்கும் கொடுமை பற்றியது.

பாஜக நிர்வாகி  மீது நடவடிக்கை எடுத்திடுக!
இதை மறைக்கவே பிற மதத்தவர் மீது இந்துக்களை ஏவும் தந்திரத்தில் இறங்குகிறது பாஜக. இந்தஅக்கிரமத்தை மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிப்பதோடு, சிறுபான்மையோர் மீது வன்முறையைத்  தூண்டும் அந்த பாஜககாரர் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தக் கொரோனா காலத்திலும் எள்ளளவு உதவியும் செய்யாதவர்கள்தாம் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியாளர்கள் என்
பதை மனதில் கொண்டு,  மத்தியில் மதரீதியான பிளவை ஏற்படுத்த முயலும் இவர்களின் சதிவேலைக்கு இரையாக வேண்டாம்என்று மக்களை மேடை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.இந்தப் பண்டிகை காலத்தில் “இந்துக் கடைகளிலேயே வாங்குவோம்” எனும் சுவரொட்டியை தமிழகத்தின் பல ஊர்களில் இந்து முன்னணி எனும் சங் பரிவார அமைப்புஒட்டியுள்ளது. இதை சில பாஜக தலைவர்களும் ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதுவும் தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வேலையாகும். கடைக்காரரின் மதம் பார்த்துபொருள் வாங்கச் சொல்வது மதப்பதற்றத்தை உருவாக்கும் சட்டவிரோதச் செயல்.

சங்பரிவாரத்தின் மதப்பதற்ற சுவரொட்டி
மதம் பார்த்து சரக்கு வாங்குவது என்றால் உலக வர்த்தகமே நின்றுபோகும். மத்தியில் உள்ள பாஜகஅரசு அப்படிப் பார்த்து வாங்குவதுஇல்லை. ஆனால் உள்ளூர் வர்த்தகத்திற்கு மட்டும் இதைப் பரிந்துரைப்பதிலிருந்து இவர்களின் வகுப்புவாத தேர்தல் அரசியல் நோக்கு பச்சையாக வெளிப்படுகிறது. அரசியல்ஆதாயத்திற்காக நாட்டின் ஒற்றுமைக்கும் மக்களின் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் சங் பரிவாரத்தின் இந்த சுவரொட்டிப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.