மாமல்லபுரம்,நவ.25- சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளி ஏழை மாணவர்களை கண்டறிந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு ‘ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா’ அழைத்துச் செல்லப்பட்டு வருகிறது. இதன்படி, 2019 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி ஞாயிறன்று (நவ.24) நடைபெற்றது. இதை செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்வம் அர்ஜூணன் தபசு அருகே கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில், கேளம்பாக்கம், கோவளம், நெம்மேலி, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 150 அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை மாணவர்கள் கண்டு ரசித்னர்.