சென்னை, ஜன. 8 - போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி ஜன.9 அன்று தொடங்கியதால் பேருந்துகள் இயங்காது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், போக்குவரத்துக் கழகங் களின் வரவுக்கும் செலவுக்கும் வித்தி யாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 100 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,
15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி டிச.19 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங் களின் கூட்டமைப்பு, அண்ணா தொழிற் சங்க பேரவை (ஏடிபி) தலைமை யிலான கூட்டமைப்பு ஆகியவை தனித் தனியாக வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கின. இதையடுத்து தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற இரண்டு சுற்று பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை.
இதையடுத்து ஜன.9 முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து ஜன.5 அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசினார். தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற நிதித்துறையுடன் பேசி முடி வெடுக்க ஒரு நாள் கால அவகாசம் கோரினார். ஜன.7 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.
அதன்படி அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் திங்க ளன்று (ஜன.8) மூன்றாவது சுற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அ.சவுந்தரராசன் பேட்டி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது: 3வது சுற்று சமரசப் பேச்சுவார்த்தை யில், எந்த கோரிக்கையையும் ஏற்க வில்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்த துறை யிலும் இழைக்கப்படாத அநீதியை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு இழைக்கிறது. தொழிலாளர் களுக்கு கொடுக்க வேண்டிய அக விலைப்படி நிலுவை 8 ஆண்டுகளாக தராமல் உள்ளனர்.
96 ஆயிரம் ஓய்வூதி யர்களுக்கு சராசரியாக மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படாமல் உள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை பிறகு பேசலாம். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை ரூ. 2 ஆயிரம் கோடியை வழங்குவது பற்றி கூட பிறகு பேசலாம். பொங்கலுக்கு முன்பு தற்போது அமல்படுத்தப்படும் 46 விழுக்காடு அகவிலைப்படியை ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டும். பணியில் உள்ள தொழி லாளர்களுக்கு 4 மாதங்களாக வழங்கப் படாமல் உள்ள அகவிலைப்படியை கொடுக்க வேண்டும் என்று கோரி னோம். அதை மறுத்து விட்டார்கள்.
15வது ஊதிய ஒப்பந்தம் பேச்சு வார்த்தை தொடங்குவதற்கான தேதி யையும் சொல்ல மறுக்கும் அரசு, வேலை நிறுத்தத்தை கைவிட கோரு வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மாதம் ரூ. 70 கோடி செலவில் பிரச்ச னையை தீர்ப்பதற்கான வழிமுறை களையும் கூறிவிட்டோம். இத்தனைக்குப்பிறகும் ஏற்காமல் இருந்தால் அரசு தவறுசெய்கிறது. வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க முடியாதது. தொழிலாளர்களிடம் பிடித்த ரூ. 2 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை திரும்ப கேட்கிறோம். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்து உரிய இடத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தாமல் உள்ளனர்
பேருந்துகள் ஓடாது
தொலை தூரம் செல்லக்கூடிய பேருந்துகள் திங்களன்று (ஜன.8) நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே இயக்கப்படும். தொலைத் தூர பேருந்துகள் செவ்வாய்க்கிழமை (ஜன.9) காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்ட பின் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் பேட்டி
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, “பொங்கல் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திட்டமிட்டப்படி 24 மணி நேரமும் இயக்கப்படும். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சுமூகத் தீர்வு காண்க: கே.பாலகிருஷ்ணன்
“பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத் திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமை பொது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பை யையே ஏற்படுத்தும். எந்தநேரத்திலும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வி னை எட்ட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.