tamilnadu

img

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, மே 27 -  உளுந்தூர்பேட்டை அரசுப் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு 15 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக பேசி நிறைவேற்ற வேண்டும், பேருந்துகள் இயக்கத்தை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, 25,000 காலி பணியிடங்களை உடன டியாக நிரந்தர பணியிடமாக நிரப்பி வேலை வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்க ப்படாமல் உள்ள டி.ஏ உயர்வை உடனடி யாக நீதிமன்ற தீர்ப்பு படி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கம் சிஐடியு சார்பில் உளுந்தூர் பேட்டை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு மேலாக உளுந்தூர் பேட்டை பணிமனையில் சேரும் சகதியு மாக உள்ள தரைத்தளத்தை சிமெண்ட் தளம் அமைத்து தரக்கோரியும், விடுப்புகள் வழங்குவதில் நிர்வாகம் தன்னிச்சையாக நிபந்தனை விதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்திற்கு பணிமனை தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் மு.செந்தில் துவக்கி வைத்து பேசினார். மண்டல செயலாளர் வி.சாமிநாதன், மண்டல பொருளாளர் கே.சுந்தரபாண்டியன், பணி மனை செயலாளர் கே.திருமுருகன், துணை  தலைவர் ஏ.ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்.ராஜசேகர், சிஐடியு நிர்வாகி டி.எஸ்.மோகன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஏ.ஆனந்த கண்ணன் நன்றி கூறினார்.