ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்தி கடலூரில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் துவக்கி வைத்து பேசினார். போராட்டத்திற்கு தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி. பழனிவேல்,சங்கத் நிர்வாகிகள் ஜி. பாஸ்கரன், எஸ்.ராமமூர்த்தி, பி. முருகன், எம்.அரும்பாலன், சிஐடியு மாவட்ட தலைவர் பி.கருப்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ரங்காபுரம் வேலூர் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு செயலாளர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் ஜூன் 24 முதல் 25ந்தேதிவரை காலை 10 மணி வரை உண்ணாநிலைப் போராட்டம் துவங்கியது. சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தார்.மண்டல நிர்வாகிகள் கே.இளங்கோ, ஜி.சஞ்சீவி, கேசவன், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எ. சேகர் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் காங்கேயன், பாரி, எம்.வீரபத்திரன், போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் கே .நாகராஜன், பார்த்திபன், வடிவேல், சிவா, ஏழுமலை, தமிழழகன், தாமோதரன், ராமதாஸ், கிருஷ்ணமூர்த்தி, சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூர் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து பணி ஓய்வு பெற்று தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாநிலை போராட்டம் திங்களன்று துவக்கியது. சங்க துணை பொது செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிஐடியு மாவட்ட தலைவர் வாசுதேவன், மாநில செயலாளர் நாகராஜ், தருமபுரி மண்டல பொது செயலாளர் எஸ்.சண்முகம், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஸ்ரீதரன், நகர கிளை தலைவர் அருண், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் சி.கோவிந்தன், பி.ராஜா, தியாகராஜன், குமார்,கோவிந்தராஜ்,சத்யநாதன், சரவணன், பாலாஜி, அருள், உமர்பாரூக் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலைய போக்குவரத்து பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல பொதுச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்ட தலைவர் சாரங்கன், ஜி.வசந்தா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர்.மதுசூதனன், ஏ.வெங்கடேசன், ஜெ.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்ட ஆட்சியர்
செங்கம் தாலுகா, கல்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவன் குமார் (23) என்பவர் திருவண்ணாமலையிலிருந்து போளூர் நோக்கி பைக்கில் திங்களன்று சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். அப்போது அந்த வழியாக வெம்பாக்கத்திற்கு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் காயமடைந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.