சென்னை, ஜன.3- ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள தாக போக்குவரத்து தொழிற்சங்கங் கள் அறிவித்துள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகை யை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு 100 மாதங்களாக வழங் கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்,
தேர் தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரி சுப் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி டிச.19 அன்று போக்குவரத்து அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலசங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் வேலை நிறுத்த அறிவிப்பு வழங் கப்பட்டது. இதன்படி, ஜன.4க்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.
இந்நிலையில், புதனன்று (ஜன.3) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிஐடியு, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்டு 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன்பின்னர் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள 6 அம்ச கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் உறுதியான எந்த ஒரு வாக்குறுதியையும் வழங்கவில்லை. அமைச்சர் கேட்டுக் கொண்டபடி பொங்கலுக்குப் பிறகு பேசலாம்; கால அவகாசம் தேவை என்று தெரி வித்தனர்.
இதனை அனைத்து தொழிற் சங்கங்களும் நிராகரித்து விட்டோம். வேலைநிறுத்தத்தை தவிர்க்கும் வகையில், 6 கோரிக்கைகளில் ஓய்வூ தியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை பொங்க லுக்கு முன்பு வழங்கப்படும் என்று ஒரு கோரிக்கையையாவது நிறை வேற்றுங்கள். குறைந்தபட்சம், பொங்கலுக்கு முன்னால் இடைக் கால நிவாரணமாவது அறிவியுங்கள் என்று ஆலோசனை கூறினோம். அதற்கு அதிகாரிகள் உறுதியான பதில் அளிக்கவில்லை.
எனவே, பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கொண்ட கூட்ட மைப்பு, அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையிலான கூட்ட மைப்பு இணைந்து ஜன.9 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய் வது என்று முடிவெடுத்துள்ளோம். தமிழக அரசு தலையிட்டு அக விலைப்படியை வழங்க முன்வந் தால் வேலை நிறுத்தத்தை தவிர்க்க லாம்.
இவ்வாறு அவர் கூறினார்.