சென்னை, நவ. 10 - அகவிலைப்படி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதை கண்டித்து வெள்ளியன்று (நவ.10) மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் கருப்பு உடை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போக்குவரத்து ஓய்வூதியர் களுக்கு 96 மாதங்களாக அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கா மல் உள்ளது. எனவே, இந்த தீபாவளியை ஓய்வூதியர்கள் கருப்பு தீபாவளியாக அறிவித்து, போக்கு வரத்து கழக தலைமை அலுவல கங்கள், மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற போராட்டத்தின்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
90 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை உரிய காலத்தில் வழங்குவதில்லை. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு அகவிலைப் படியை உயர்த்தி வழங்கவில்லை. அகவிலைப்படி வழங்க நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதை அமல்படுத்தாமல், காலம் கடத்தும் நோக்கில் மேல் முறை யீடுகள் செய்து வருகிறது. இதனை கண்டித்து செப்டம்பர் 26-27 தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது, முதலமைச்சர் தனிச் செயலாளர் உமாநாத், போக்குவரத்து துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகி யோர், தீபாவளிக்கு முன்பு அகவிலைப்படி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அடுத்தகட்ட போராட்டம் வீரியம் மிக்கதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்திற்கு சென்னை கிளை தலைவர் டி.குருசாமி தலைமை தாங்கினார். மாநில பொரு ளாளர் வரதராஜன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.வீரராகவன், எஸ்.சண்முகம், சென்னை கிளை இணைச் செயலாளர் தாமோதரன், துணைத் தலைவர் சிதம்பரம், விரைவு போக்கு வரத்து கிளை தலைவர் பிரம்மநாய கம், அனைத்து ஓய்வூதியர் சங்கங் களின் கூட்டமைப்பு செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.