கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கையர் தின விழா
கடலூர், மே 27 - திருநங்கையர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவை ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருநங்கை யர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அவர், சமூக பாகுபாடு மற்றும் குடும்ப நிராகரிப்பு காரணமாக திருநங்கையர்கள் நாடோடி வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ள ப்படுவதாகவும், இதனை மாற்ற முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதா கவும் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் 316 திருநங்கையர்களுக்கு அடையாள அட்டை, 61 பேருக்கு ஓய்வூதியம், 41 பேருக்கு சுயதொழில் மானி யம், 24 பேருக்கு வீட்டுமனை பட்டா, 131 பேருக்கு மருத் துவ காப்பீட்டு அட்டை, 210 பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. கூடுத லாக 8 பேருக்கு புதிய மானி யம் வழங்க விண்ணப்பிக்க ப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் நாள் திரு நங்கையர் தினமாக கொண்டாடப்படுவதாகவும், இந்த ஆண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கொண்டாடப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நடன, பாட்டு, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ராஜசேகரன், பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.