பெண்ணை வெட்டிய 4 பேர் கைது
போரூர், ஜூலை 9- சென்னை எம்.ஜி.ஆர். நகர் புகேழந்தி தெருவைச் சேர்ந்தவர் பிருந்தா. இவர் அதே பகுதி சூளைபள்ளம் வெங்கட்ராமன் சாலையில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பராக திலிபன் என்பவர் அறிமுகமானார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிருந்தா-திலிபன் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிருந்தா திலிபனுடன் பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த திலிபன் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான ஆர்த்தி வேலு, டிரைவர் கோகுல், ஆனந்த் ஆகியோருடன் அழகு நிலையம் சென்று பிருந்தாவிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அவர்கள் பிருந்தாவை சரமாரியாக தாக்கி கத்தியால் வெட்டி, 1.5 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து பிருந்தா எம்.ஜி.ஆர்.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திலிபன் மற்றும் அவரது கூட்டாளிகளான ஆர்த்தி வேலு, கோகுல், ஆனந்த் ஆகிய 4 பேரையும் திங்களன்று இரவு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளியான ஆர்த்தி வேலு மீது ஏற்கனவே எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், திரு முல்லைவாயில் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கழிவு நீர் கால்வாய் பிரச்சனை: தீர்வு கோரி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, ஜூலை 9- விளாத்திகுளம் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பிரச்ச னைக்கு தீர்வு காணவலியுறுத்தி மாவட்டச் செயலாளர் பூமயில் தலைமை யில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: விளாத்திகுளம் பேரூராட்சி 12வது வார்டு சிதம்பர நகர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேல்புறம் குட்மிஷன் சர்ச் அருகே உள்ள பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைக்கப் பட்டுள்ள கழிவுநீர் கால்வாய், சரியான வாட்டம் இன்றி மேடாக உள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப் படுகின்றனர். இதுகுறித்து கடந்த 6ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.