tamilnadu

சென்னை , சோழிங்கநல்லூர் முக்கிய செய்திகள்

தென்சென்னைக்கு கூடுதல் பேருந்துகள்

சென்னை, ஜூலை 5-  சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 3500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மிகவும் பழுதடைந்து மோச மான நிலையில் ஓடிய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. சென்னைக்கு மட்டும் புதிய பேருந்துகள் சிகப்பு கலரில் தயாரிக்கப்பட்டு விடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 460 புதிய பேருந்துகள் மாநகர மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. புதிய பேருந்துகள் தெற்கு புற நகர் பகுதிகளுக்கு அதிகம் விடப்படுகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, பழைய மகாபலிபுரம், சிறு சேரி வரை புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதிதாக விடப்பட்ட 100 பேருந்துக ளில் 40 பேருந்துகள் சென்னையின் தெற்கு புற நகர் பகுதிகளை இணை க்கும் வகையில் விடப்பட்டு ள்ளது. பொது மக்களின் தேவையை கருதி பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளும் மாற்றப்பட்டுள்ளன. 579 ஏ தாம்பரம்-வாலாஜாபாத், 21ஜி தாம்பரம்-பிராட்வே, 23 சி அயனாவரம்-பெசன்ட் நகர், 29சி பெரம்பூர்- பெசன்ட்நகர், 27 பி அண்ணா சதுக்கம்- கோயம்பேடு ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. 

தண்ணீர் லாரி மோதி பெண் பலி

சோழிங்கநல்லூர்,ஜூலை 5-  அடையாறு, ஜல்லடி யான் பேட்டையை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி உமா (47). வெள்ளியன்று (ஜூலை 5) காலை கணவன் - மனைவி இருவரும் மாம்பாக்கத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே வந்த போது அவ்வழியே வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய உமா சம்பவ இடத்திலேயே பலி யானார்.