சுய தொழில் தொடங்க திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை, ஆக. 17-இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் எம்.எஸ்.எம்.இ. தொழில் மேம்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் சென்னை விரிவாக்க கிளை சார்பில் இரு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கிண்டியில் ஆக. 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சோலார் பவர் சிஸ்டம், சோலார் பிவி மற்றும் தெர்மல் சிஸ்டம், ஆன் கிரிட் ஆப் கிரிட் சிஸ்டம், கனெக்ஷன்ஸ், & சிஸ்டம் காம்போனென்ட்ஸ், சோலார் இன்வெர்ட்டர் & பேட்ட ரிஸ், ஒயரிங் டயகிராம், டிசைன்,லோடு; கால்குலேஷன் & ஆர்.ஓ.ஐ., மெயின்ட்டனென்ஸ் ஆப் சோலார் சிஸ்டம் முதலிய வைகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பயிற்சியில் விளக்கப்படும். ஆக.23 முதல் 25 வரை துரித உணவுப் பொருள்கள், ஜூஸ், ஜாம், ஊறுகாய், ஸ்குவாஷ், அப்பளம், ஜெல்லி, மசாலா பொருள்கள் மற்றும் பல தயார் செய்யும் முறைகள் பற்றி பயிற்சியில் விளக்கப்படும். தொழில் நுட்ப ஆலொசனைகள், உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் வாங்கவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யவும், தரக்கட்டுப்பாடு பற்றிய விவரங்கள் விளக்கப்படும். மேலும் சுயத் தொழில் தொடங்குவதற்கு ஆலோசனைகள், திட்ட அறிக்கை தயார் செய்தல், அரசின் சலுகை திட்டங்கள் மற்றும் வங்கி கடன் திட்டங்கள் பற்றிய விவரங்கள் அடங்கும். படித்த வேலையற்ற இளைஞர்கள் இந்த பயிற்சிகளை பெறலாம். 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி கட்டணத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்களுக்கு 50 விழுக்காடு கட்டண சலுகை உண்டு. பயிற்சியின் முடிவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் இடம் : எம்.எஸ்.எம்.இ. டி.ஐ. அனெக்ஸ் பில்டிங், எம்.எஸ்.எம்.இ. கேம்பஸ், கிண்டி, சென்னை - 32. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் பதிவு மற்றும் விவ ரங்களுக்கு 9551950555 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
சூயஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது
கோவை, ஆக.17-கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக உரி மையை அந்நிய சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சூயஸ் மோசடி திட்டம் குறித்து முகநூலில் பதிவிட்ட கோவையை சார்ந்த ஒருவரை கைது செய்து அச்சு றுத்தல் நடவடிக்கையை துவங்கியுள்ளது. கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை 21 ஆண்டுகாலத்திற்கு சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கி யுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் இல்லாத நிலையில் அவசர, அவசரமாக சூயஸ் நிறுவனத்துடன் ஒப் பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன என்று ஆளும் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கண்டித்து இயக்கங் களை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி குடிநீர் கட்டண உரிமை, பொதுக் குழாய் அகற்றம் ஆகியவை குறித்தும், வறட்சி காலத்தில் எப்படி 24 மணிநேரமும் சூயஸ் குடிநீரை விநியோகம் செய்யும் ஆகிய கேள்விகள் குறித்து அதிகாரிகள் முரண்பாடாக சொல்லி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சி ஆணையர் சரவன்குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்திக்கையில் இதுகுறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பியபோதும், விரிவான கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடும் செய்கி றோம் என நழுவிச் சென்றார். நாளுக்குநாள் இவ்விகாரம் பூதாகரமாக எழுந்து வருகின்ற நிலையில் இதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக கைது உள்ளிட்ட நடவடிக்கையின் மூலம் அச்சுறுத்தல் நடவடிக் கையை துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சூயஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு உக்கடம் காவல்நிலையத்தில் சூயஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பு கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இதனையடுத்து பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு தங்களின் விசுவாசத்தை காட்டும் விதமாக காவல்துறையும் அதிரடியாககளம் இறங்கியுள்ளது. இதன்ஒருபகுதியாக வெள்ளியன்று கரும்புக்கடை பகுதியை சார்ந்த அப்துல்ரசாக் என்பவரை கைது செய்துள்ளது. இவர் ஹலோ ஆப்பில் சூயஸ் திட்டம் குறித்து வெளியான வீடியோவை சக நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைதும் செய்தனர். மாநகர மக்களின் குடிநீர் உரிமை குறித்து எழும் சந்தேகங்க ளுக்கு விடையளிக்காத கோவை மாநகராட்சி இதுபோன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் நபர்களை காவல் துறையை கொண்டு கைதுசெய்து அச்சுறுத்தல் நடவடிக் கையை துவங்கியுள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரக்குறைவாக நடந்து கொண்ட காவலர் அவிநாசி செய்தியாளர்கள் கண்டனம்
திருப்பூர், ஆக. 17–தன்னிடம் வம்பு செய்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தீக்கதிர் செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு அவிநாசி செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவிநாசி தீக்கதிர் செய்தியாளர் அருண். இவரிடம் கரு வலூரைச் சேர்ந்த மோகன்தம்பி என்பவர் முன்விரோதத் துடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இது குறித்து வியாழனன்று இரவு அவிநாசி காவல் நிலையத்தில் அருண் புகார் கொடுத்தார். மறுநாள் அவர்களை அழைத்து விசாரிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி வெள் ளியன்று காவல் நிலையத்துக்கு அருண் சென்றபோது, எதிர்தரப்பினரிடமும் புகார் எழுதி வாங்கிக் கொண்டு, இரு தரப்பினர் மீதும் பிணையில் வர முடியாதபடி வழக்குப் பதிவோம் எனச் சொல்லி மிரட்டியதுடன், அருணின் செல் போனையும் பறித்து வைத்துக் கொண்டு குற்றவாளி போல் அமர வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அங்கு சென்று பேசியதன் அடிப்படையில் அருணிடம் எழுதி வாங்கிக் கொண்டு செல்போனை கொடுத்தனர். செய்தியாளர் அருண் சட்டப்படி புகார் கொடுத்ததன் மீது முறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக காவலர் சிவப்பிரகாசம் என்பவர் தரக்குறைவாக நடந்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி செய்தியாளர்கள் டிஎஸ்பியை சந்தித்து முறையிடுவதென முடிவு செய்துள்ளனர். செய்தியாளர் புகார் கொடுத்தாலே இதுபோல் தரக்குறைவாக நடந்து கொள்ளும் காவலர்கள் சாமானிய மக்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.