சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நாடு முழுவதும் நவம்பர் 5 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.