அம்பத்தூர், ஜூன் 28- திருவேற்காடு அருகே பெண் வியாபாரியிடம் செயின் பறித்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவேற்காடு அருகே வீரராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி அம்சா (55). இவர் ஆவடி - பூந்தமல்லி சாலை யில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரி அருகே பழக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாழக் கிழமை இரவு அம்சா வியா பாரம் முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது அந்த வழி யாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், அம்சா கழுத்தில் அணிந் திருந்த 4 சவரன் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அம்சா திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேம ராக்களில் பதிவான காட் சியை வைத்து குற்ற வாளியை தேடி வருகின்ற னர்.