சென்னை, மார்ச் 5 - 2023 டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயல், அதிகனமழை மற்றும் பெருவெள்ளத்தால் நகர்புறங்களில் சேத மடைந்த வீடுகளின் சீர மைப்பு மற்றும் கட்டுமானத் திற்கு ரூ. 45 கோடியே 84 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.
கடந்த 2023 டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் கார ணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அத னைத் தொடர்ந்து தென்மாவ ட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கன மழையினால் வரலாறு காணாத பாதிப்பைச் சந்தித் தன. இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பா லான ஏழை மக்களின் வீடுகள் கடும் சேதம் அடைந்தன.
இதையடுத்து, மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ. 2 லட்சம் வரையும் முழுமை யாக சேதமடைந்த வீடு களை மீண்டும் புதிதாக கட்டு வதற்கு ரூ. 4 லட்சம் வரை யும் நிவாரணமாக வழங்கப் படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வ ரின் அறிவிப்பு அடிப்படை யில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சி கள் மற்றும் நகராட்சிப் பகுதி களில், மழைவெள்ளத்தால் பகுதியளவு மற்றும் முழுமை யாக சேதமடைந்த 955 வீடு களைப் பழுது நீக்கம் செய்ய வும், புதிய கட்டுமானத் திற்கும் ரூ. 24 கோடியே 22 லட்சமும், பேரூராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த 577 வீடுகளுக்கு ரூ. 21 கோடியே 62 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 45 கோடியே 84 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.