சென்னை, நவ.2- நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படு வதாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, கையெழுத்து இயக்கத்தில் மனுதாரர் எப்படி பாதிக்கப் படுகிறார்? நீட் தேர்வு விஷயத்தில் ஒன்றிய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாண வர்கள் நலனுக்கு விரோதமாக இருந்தால் வழக்கு தொடரலாம் என்றும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிக்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர். இதுபோல பொது நல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது என்று நீதிபதிகள் கூறினர். கையெழுத்து இயக்கத் துக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.