tamilnadu

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 13 - தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாண வர்களின் பாதுகாப்பி னையும், சுகாதாரத்தினை யும் உறுதி செய்திட முதல மைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோடை விடுமுறைக்குப் பின் திங்களன்று (ஜூன்  13) பள்ளிகள் திறக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், சென்னைக்கு அருகே உள்ள வடகரை அரசு ஆண் கள் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் உட்கட்ட மைப்பு வசதி, வகுப்பறைகள், சமையல் கூடங்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்த  முதலமைச்சர், குழந்தை களுக்கு கற்பிக்கும் முறை யையும் மாணவர்களோடு அமர்ந்து கவனித்தார். அதன்பின்னர் முதல மைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கல்விக்  கூடங்களில் உள்ள உட்கட்ட மைப்பு வசதிகள் முழு மையாக இருந்தால்தான், கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டும் முறையாக நடைபெறும். எனவே, கட்சி சார்பற்ற முறையில், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப் பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பள்ளிகளை அவ்வப்போது பார்வையிட வேண்டும். அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர், துறை அலுவலர்களுக்கு தெரிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவறைத் தொட்டிகள் மூடியிருப்பதையும், குடிநீர்த் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, சுத்த மான குடிநீர் வழங்கப்படு வதையும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு  உறுப்பினர்கள், தேர்ந் தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் கண்காணிக்க வேண் டும் என்று அறிவுறுத்தினார்.
ஆசிரியர்களுக்கு...
மிக நீண்ட இடை வெளிக்குப் பிறகு பள்ளி களை நோக்கி வரும்  பிள்ளைகளை கனிவுடன்  வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும். தடைபட்ட கல்வி யைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் ஆசிரி யர்களின் கைகளில்தான் இருக்கிறது என்று சமூக  வலைப்பதிவு வாயிலாக வேண்டுகோள் விடுத்துள் ளார்.