tamilnadu

ரவுடியிசத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிப்பேன்

சென்னை, ஜூலை 8 - சென்னை மாநகரத்தின் 110-ஆவது காவல் ஆணையராக அருண், திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 “நான் சென்னையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் துணை ஆணையர், இணை ஆணை யர் என சட்டம் - ஒழுங்கிலும், போக்கு வரத்துப் பிரிவிலும் பணிபுரிந்துள் ளேன். எனவே, சென்னை எனக்கு புதிது இல்லை. காவல் ஆணையர் பதவியை மற்றொரு முக்கிய பொறுப் பாக பார்க்கிறேன். ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது, காவல் துறை யில் உள்ள லஞ்ச விவகாரத்தில் நட வடிக்கை எடுப்பது, கட்டப் பஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கை களுக்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன்” என்றார்.

சமீபகாலமாக சட்டம் - ஒழுக்கு சீர்குலைந்து விட்டது என்ற அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த காவல் ஆணையர் அருண், “சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதன் அடிப்படையில் கூறப்படுகிறது? காலங்காலமாக குற்றங்கள் நடப்பதும், அதை காவல் துறை தடுப்பதும் நடந்து வருகிறது.

புள்ளி விவரங்கள்படி பார்த்தால் 2022,  2023-ஆம் ஆண்டுகளில் குறை வான கொலைச் சம்பவங்களே நடந்திருக்கிறது. இருப்பினும் ரவுடி களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைச் செய்வோம்” என்றார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னதாகவே உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தும் அதை காவல்துறை பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது” என்றார்.

ரவுடி களுக்கு எதிரான நடவடிக்கை என் றால் என்கவுண்ட்டர் சம்பவங்கள் இருக்குமா என்ற கேள்விக்கு, “ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் பதிலளிப்போம்” என சூசகமாக தெரிவித்தார். 1998-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்கு சேர்ந்த அருண், சென்னை பல்கலைக் கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல் துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்தவர்.