tamilnadu

img

முதல்வர் ஸ்டாலின்-சிபிஎம் தலைவர்களுக்கு அருந்ததியர் அமைப்பு தலைவர்கள் நன்றி!

சென்னை, ஆக. 3 - அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகி யோரை அருந்ததியர் அமைப்பு களின் தலைவர்கள் சனிக்கிழ மையன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பட்டியலினத்திற்குள் அருந்ததியர் பிரிவுக்கு 3 சத விகித உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம், கடந்த  வியாழனன்று தீர்ப்புஅளித்தது.

முன்னதாக இதற்கான சட்டம் 2009-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அப்போது, இந்த சட்ட மசோதாவை சட்டப்பேர வையில் அறிமுகம் செய்து பேசி யவர், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவார். 

அந்த வகையில், மு.க. ஸ்டாலின் 2009-ஆம் ஆண்டு தாக்கல் செய்து நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதி கள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ள நிலை யில், முதல்வர் மு.க. ஸ்டாலி னை, அருந்ததியர் அமைப்புக் களின் தலைவர்கள், சனிக் கிழமையன்று அண்ணா அறி வாலயத்தில் நேரில் சந்தித்து, தங்களின் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

ஆதித்தமிழர் பேரவை தலைவர் இரா. அதியமான், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் கட்சி யின் தலைவர் ஜக்கையன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலை வர் நாகை. திருவள்ளுவன், எழுத்தாளர் மதிவண்ணன் (சாக்கிய அருந்ததியர் சங்கம்) மற்றும் 45 அருந்ததியர் அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ. வேலு, அர. சக்கரபாணி, எம். மதிவேந்தன், மக்களவை உறுப்பினர் ஆ. ராசா மற்றும் அந்தியூர் செல்வராஜ், சட்ட மன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இ. பரந்தாமன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, கழக இணை அமைப்புச் செயலாளர் அன்ப கம் கலை ஆகியோர் உடனி ருந்தனர்.

கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து 

அருந்ததியர் மக்களுக் கான உள் இடஒதுக்கீடு இன்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலை யில், இந்த கோரிக்கையை அர சியல் முழக்கமாக்கி தொடர் போராட்டங்களை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், அதன் தலைவர்கள் என். வரதராஜன், ஜி. ராமகிருஷ் ணன், கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத் உள்ளிட்டோர் ஆவர். உச்சநீதிமன்றம் வரை சென்று அருந்ததியர் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் சட்டப் போராட்டத்தையும் நடத்தி யவர்கள். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு அலுவல கத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ண னை சந்தித்து அருந்ததியர் அமைப்புக்களின் தலைவர்கள் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு. ஜக்கையன், பொது செயலாளர் விஸ்வ குமார், பொருளாளர் என். சேகர், மாநில ஆலோசகர் எழில் துரை,  சு. சீரங்கன், சேசுராஜ், ஜெய் சங்கர், மாணிக்கம், க. பாண்டி, செல்வக்குமார், துரை அமுதன், திராவிடர் தமிழர் கட்சித் தலை வர் வெண்மணி, மாநில அமைப்புச் செயலாளர் விடு தலை வீரன், தலைமை நிலையச் செயலாளர் பேரறிவாளன், ஆதித் தமிழன், தங்கவேல், செந்தில், சசி, சூர்யா ஆகியோர் கே. பாலகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் உடனிருந்தார்.