tamilnadu

img

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு கூடுதல் நேரம்!

சென்னையில் சில தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் நேரம் அளிக்க டி.என்.பி.எஸ்.சி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 51,071 பேர் 186 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் சில தேர்வு மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்ததால், வினாத்தாள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு தாமதமான தேர்வு மையங்களுக்கு மட்டும் கூடுதல் நேரம் அளிக்க டி.என்.பி.எஸ்.சி உத்தரவிட்டுள்ளது.