சென்னை, நவ. 25- தமிழக அரசு துறைகளில் காலி யாக உள்ள பல்வேறு பணியிடங் களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது
குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப் படுகின்றன. இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக் கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்ட வணை வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது. 30 வகையான போட்டித் தேர்வு, தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.