சென்னை, பிப்.16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு பேரவைக் கூட்டம் சனிக் கிழமை (பிப்.15) சென்னை கேரளசமாஜத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கவிஞர் நா.வே.அருள் தலைமை தாங்கினார். சூசை நாதன் வரவேற்றார். மாநில கவுரவத் தலைவர் ச.தமிழ் செல்வன் துவக்கவுரை யாற்றினார். ‘கீழடியில் கிளைத்த மொழி’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் க.நாகப்பனும், ‘குடியு ரிமைச் சட்டமும் இந்தியக் குடிகளும்’ தலைப்பில் நா.வீரபெருமாளும் கருத்துரை வழங்கினர். மாநில பொதுச்செய லாளர் ஆதவன்தீட்சண்யா, நிர்வாகிகள் தி.இரா ஜேந்திரகுமார் (வட சென்னை), திரைக்கலைஞர் பகத்சிங் கண்ணன் (தென் சென்னை), கவிஞர் வெ.இர வீந்திரபாரதி உட்படபலர் கலந்து கொண்டனர். நிறை வாக பொன்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். க.கார்த்திக் வர்தினி, சுதாஉலகஒளி கதை சொல்ல, பேரா.சி.சுந்தர மூர்த்தி கவிதை வாசித்தார். சென்னை சிங்காரவேலர் கலைக்குழுவின் பறை இசை யும் புல்லாபுரம் சீனிவா சனின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பேரவைக் கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழுவிற்கு ராஜாசங்கீதன் ஒருங் கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.