tamilnadu

சரணடைய அவகாசம் கேட்கும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்

சென்னை, ஜூலை 8- கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சர வணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைய  அவகாசம் கேட்டு தாக்கல்  செய்யப்பட்ட மனு உச்சநீதி மன்றத்தில் செவ்வாயன்று (ஜூலை 9)  விசாரணைக்கு வருகிறது. சரவணபவன் ஓட்டல் அதி பர் ராஜகோபால் (71). இவர்  தனது ஓட்டலில் பணிபுரிந்த  ஊழியரின் மகள் ஜீவ ஜோதியை 3-வது மனைவி யாக்க விரும்பினார். இதனால்  அவரது கணவர் பிரின்ஸ்  சாந்தகுமாரை கூலிப் படையை ஏவி கொலை செய்த  தாக வழக்கு பதிவானது. இந்த  வழக்கை விசாரித்த பூந்த மல்லி சிறப்பு நீதிமன்றம் 10  ஆண்டுகள் சிறைத் தண்டனை  விதித்து கடந்த 2004-ம்  ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில்  அப்பீல்  செய்தார். வழக்கை விசா ரித்த நீதிபதிகள் கொலை குற்றத்தை கருத்தில் கொள்ளாமல் கீழ் நீதிமன்றம் குறைந்த தண்டனை வழங்கி இருக்கிறது. இது மன்னிக்க முடியாத குற்றம். எனவே ராஜகோபால் மற்  றும் பட்டுராஜன், ஜனார்த் தன், டேனியல், தமிழ் செல்  வன், கார்மேகம் ஆகிய 6 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து  ராஜகோபால் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகளுக்கு  பிறகு இந்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் அந்த  நீதிமன்றமும் உறுதி செய்  தது. அத்துடன் ஜூலை 7ஆம்  தேதிக்குள் பூந்தமல்லி நீதி மன்றத்தில் சரண் அடைந்து சிறைத்தண்டனையை அனு பவிக்க செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி ஞாயிறன்று  அவர் சரண் அடைந்து இருக்க வேண்டும். விடு முறை நாள் என்பதாலும், உடல் நிலை சரியில்லாத தாலும் சரண் அடைய வில்லை. திங்களன்று  சரண்  அடைவார் என்று எதிர்ப்பார்க்  கப்பட்டது. இதற்கிடையே சரண் அடைவதற்கு அவகாசம் கோரி ராஜகோபால் சார்பில்  உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கள் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக கூறினர். அப்போது ராஜ கோபால் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று  வாதிட்டனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி கள் வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.