tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நான்கு மாநில தேர்தல்
வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில், தெலங்கானா, மத்தியப் பிர தேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.  அவர்களது ஆட்சிக்காலம் சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத் தையும், வளர்ச்சியையும் வளத்தையும் அளிப்பதாக அமைய விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மிக்ஜம்’ புயல்; கண்காணிப்பில் டெல்டா மாவட்டங்கள்

நாகப்பட்டினம், டிச.3- ‘மிக்ஜம்’ புயலை அடுத்து டெல்டா மாவட்டங் களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம். நம்பியார் நகர், சாமந்தம்பேட்டை, செருதூர், வேளாங் கண்ணி  கரையோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மிக்ஜம் புய லின் தாக்கம் காரணமாக இந்த மாவட்டங்களில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. சில பகுதிகளில் ஞாயிறன்றும் மழை பெய்தது. இதையடுத்து கண்காணிப்பு நட வடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

•    நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத் தின் தரவுகளின்படி,  அதிகபட்சமாக கோடியக் கரை மாவட்டத்தில் 6.7 செ.மீ மழை பதிவா கியுள்ளது. நாகப்பட்டினத்தில் 3.6 செ.மீ., திருக் குவளையில் 5.5 செ.மீ., வேதாரண்யத்தில் 5.3 செ.மீ., வேளாங்கண்ணியில் 2.8 செ.மீ.,  மழை பதிவாகியுள்ளது. தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகப்பட்டி னம் துறைமுகம் அருகே உள்ள கடுவையாற் றின் முகத்துவாரத்தில் மீன்பிடிப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் மாவட்டக் கண்காணிப்பு அலுவல ரும், ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸ் ஆகி யோர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். 

கனமழையை எதிர்கொள்ள முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியதோடு, தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறி செருதூர், தலையாற்றில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மீனபநல்லூரில் வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களை அவர்கள் பார்வையிட்டனர்.

மதுரை  அலுவலகத்தில் 
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை 
டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை  புகார்

சென்னை,டிச.3-
 மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் என்றும் இந்த சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை டிஜிபி அலுவலகத்திடம் அமலாக்கத் துறை புகார் அளித்துள்ளது.

மதுரையில் உள்ள அமலாக்கத் துறையின் துணை மண்டல அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய அன்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் டிச.1-ம் தேதி மாலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசார ணையைத் தொடங்கினர். 

இந்த சோதனையில், அன்கித் திவாரி அறையிலிருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள், பதிவேடுகள், அவரது வங்கிக் கணக்கு மற்றும் பரிவர்த்தனை தொடர்பான ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டன. அன்கித் திவாரி அளித்த வாக்கு மூலத்தின்படி, இதில் தொடர்புடைய அமலாக்கத் துறை அதி காரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க, லஞ்ச

இந்தநிலையில், அமலாக்கத் துறை சார்பில் தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக் கப்பட்டுள்ளது. உதவி இயக்குநர் பிரிஜேஷ் பெனிவால் அளித்துள்ள அந்த புகாரில், ‘மதுரையில் உள்ள அம லாக்கத் துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் அத்துமீறி நுழைந்து அடையாளம் தெரியாத நபர்களைக் கொண்டு சோதனை நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், அன்கித் திவாரியை 15 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக் கவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சோதனையில் எத்தனை ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். எந்த ஆவணங்கள் எல்லாம் தவறாக கையாளப்பட்டுள்ளன என்பது குறித்தும் தெரிய வில்லை. அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனை சட்ட விரோதமானது. எனவே, உரிய அனுமதி மற்றும் அடையாள அட்டை இன்றி அம லாக்கத் துறை அலுவலகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அனுமதியின்றி அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் மற்றும் உரிய அனுமதி மற்றும் அடையாள அட்டை இல்லாமல் நுழைந்தவர்கள் மீது  குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அம லாக்கத் துறை விசாரித்து பல அதிமுக்கிய வழக்கு விவ ரங்கள் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றது, பல்வேறு வழக்கு ஆவணங்கள் உள்ள அறையில் மொபைல் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று அமலாக்கத் துறை புகாரில் தெரி விக்கப்பட்டுள்ளது.

கோவை கார் சிலிண்டர் வழக்கில்  குற்றவாளிகளுக்கு 6 நாட்கள் காவல் 

பூந்தமல்லி, டிச. 3- கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை 6  நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் (28) என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புல னாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வரு கின்றனர். மேலும் பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் இதுவரை இந்த வழக்கில் 14  பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப் பட்டவர்களில் பலரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த சில மாதங்க ளாக காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அதன் ஒருபகுதியாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது அசாருதீன் (எ) அசார், தாஹா நசீர் ஆகிய இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புல னாய்வு முகமை அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீது விசாரணை முடிந்து நீதி பதி இளவழகன் சனிக்கிழமை அளித்த தீர்ப்பில் 2 குற்றவாளிகளையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து மீண்டும்           டிசம்பர் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்திரவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் 2 குற்றவாளிகளையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த அழைத்து சென்ற னர்.

புயல்,கனமழை எதிரொலி 
4 மாவட்டங்களில்  இன்று பொது விடுமுறை

சென்னை, டிச. 3- தமிழ்நாட்டில் திங்களன்று (டிச.4) நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரண்டு நாட்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்க ல்பட்டு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக் கப்பட்டுள்ளது.

மேலும் திங்கட்கிழமை மாலை வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் தேவை யில்லாமல் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரி விக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட் டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டிசம்பர் 4ஆம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.

எவையெல்லாம் இயங்காது?

அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், நீதித்துறை உள்ளிட்டவை சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மூடப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

எவை எவை இயங்கும்?
அத்தியாவசியப் பணிகளை மேற்கொள் ளும் நிறுவனங்கள் இயங்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. காவல்துறை, தீய ணைப்புத் துறை, உள்ளாட்சி, பால் விநியோ கம், நீர் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மின் விநியோகம், போக்கு வரத்து, எரிபொருள் விற்பனையகம், உண வகங்கள் உள்ளிட்டவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளுக்கு  செல்லத் தடை

சென்னை,டிச.3- புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புயல் கரையை கடக்கும் வரை சென்னை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், சென்னை பெசன்ட்நகர்.திருவான் மியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிச.20 இபிஎஸ் ஓய்வூதியர்கள் மறியல்

சென்னை, டிச.3 - இபிஎஸ் ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம்  ரூபாய் வழங்க வலியுறுத்தி டிச.20 அன்று மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது

இபிஎஸ் ஓய்வூதியர்கள் நல சங்கங்களின் தமிழ்நாடு ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் சனிக்கிழமை யன்று (டிச.2) சென்னையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒருங்கி ணைப்புக் குழுவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கே.பி.பாபு  உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

இபிஎஸ் ஓய்வூதியத்தை காரணம்  காட்டி மகளிர் உரிமை தொகையை தமிழ்நாடு அரசு மறுக்க கூடாது, கேரளா வில் இடதுசாரி அரசு வழங்குவது போன்று சமூக பாதுகாப்பு ஓய்வூ தியத்தை வழங்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

உயர் ஓய்வூதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.20 அன்று மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய இபிஎப் மத்திய அறங்காவலர் குழுவின் சிஐடியு பிரதிநிதி ஏ.கே.பத்மநாபன், இபிஎஸ் 95 ஓய்வூதியர்களின் கோரி க்கைகளை நிறைவேற்ற சிஐடியு துணை நிற்கும். டிச.20ந் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்திற்கும் ஆதரவளிக் கிறது என்று கூறினார்.