சென்னை:
தில்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப்படை பிரிவில்உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை (தாள்-1) கணினி முறையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது.
இந்த தேர்வு தென்மண்டலத்தில் நவம்பர்23 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கானநுழைவுச் சீட்டை, தேர்வு தேதிக்கு 4 நாட்கள் முன்பிலிருந்து, தேர்வுதேதி வரை, எஸ்எஸ்சி இணையதளத்தில்விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண் 044-28251139 மற்றும் செல்போன் எண்: 9445195946 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னையில் உள்ள தென் மண்டல எஸ்எஸ்சி இயக்குனர் கே. நாகராஜா தெரிவித்துள்ளார்.