tamilnadu

img

சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தி ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்... மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:
சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் சென்னை மாநகராட்சியால் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும்   ஆற்றுமணலை விட எம்-சாண்ட் விலை குறைவு என்ற நிலையில், ஒப்பந்தங்களில் கான்கிரீட்  கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகை மணலின் சந்தை விலை 30 சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழலை,  ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

;