“பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்” என்ற பழமொழி பொருத்தமானதே என்று சு.வெங்கடேசன் எம்பி ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது
இதுகுறித்து அவர் தனடு டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
“பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்”
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் டில்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயம்.
11-11-2022 அறிவிப்பு.
தமிழ் மொழியை காப்பது 130 கோடி இந்தியர்களின் வேலை என காசியில் நடைபெற்ற ஒன்றிய கல்வித்துறையின் நிகழ்வில் பிரதமர் பேசுவார்.
இந்தியை காப்பதே எங்களின் வேலை என அதே கல்வித்துறை டில்லியிலிருந்து உத்தரவு வெளியிடும்.
டெல்லி மத்திய பல்கலைக் கழகத்தில் இந்தி இல்லாவிட்டால் இளநிலைப் பட்டம் இல்லை.
இது தான் ஒன்றிய பாஜக அரசு.
“பொய்யும் ஏமாற்றும்
காசியோடு போகும்”
என்ற பழமொழி பொருத்தமானதே.