அரசு ஊழியர் சங்க கள்ளக்குறிச்சி வட்ட மாநாடு
கள்ளக்குறிச்சி, ஆக. 11- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கள்ளக்குறிச்சி 13 ஆவது வட்ட மாநாடு வட்டத் தலைவர் டி. சுந்தர்பாபு தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இணைச் செயலாளர் ஏ.சாமிதுரை வரவேற்றார். துணைத் தலைவர் ஏ.வேலு அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணைச் செயலாளர் எல்.ஆனந்தகிருஷ்ணன் துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் டி.வீரபுத்திரன் வேலையறிக்கை யும், பொருளாளர் வி.பாலு வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள் டி.கொளஞ்சிவேலு, ஆர்.வடிவேல், பாலசுப்பிரமணியன், ரவிக்குமார், ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகளை மாவட்ட இணைச் செயலாளர் கே.செந்தில்முருகன் அறிமுகம் செய்து உரையாற்றினார். வட்டத் தலைவராக கோதண்டராமன், வட்ட செயலாளராக டி.வீரபுத்திரன், வட்ட பொருளாளராக பி.முத்து மற்றும் துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் வி.நாக ராஜன், மாவட்டச் செயலாளர் கே.மகாலிங்கம் சிறப்புரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் பி.ரவி நிறைவுரையாற்றினார். பி.முத்து நன்றி கூறினார்.
கருத்தரங்கம்
திருவண்ணாமலை, ஆக. 11- திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கருத்தரங்கிற்கு இணைச் செயலாளர் இரா. இராஜசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆ.பூபாலன் வரவேற்றார். ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பழனி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வந்தவாசி வட்டச் செயலாளர் க.பிரபு, தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க ஆரணி கல்வி மாவட்டச் செயலாளர் பி.மாலவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா சிறப்புரையாற்றினார். கிளை பொருளாளர் மா. கௌதமமுத்து நன்றி கூறினார்.