நடராஜர் கோவிலை நிர்வகிக்க தனி சட்டம்: கே. பாலகிருஷ்ணன்
சிதம்பரம், செப்.13- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் நடராஜர் கோயில் ஆயி ரங்கால் மண்டபத்தில் கடந்த 11 ஆம் தேதி ஆடம்பரத்து டன் சிவகாசி பட்டாசு தொழிலதிபர் இல்ல திரு மணம் நடந்தது. இது பெரும் சர்சையை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறுகை யில், “சிதம்பரம் நடராஜர் கோவிலில் முறைகேடுகள் அதிகமாக நடக்கிறது. கோவி லுக்கு நேரடியாகவும், தீட்சி தர்கள் மூலமும் கிடைக்கும் வருமானத்தை தீட்சிதர்கள் கணக்கு காட்டுவதில்லை” என்றார். வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஆயி ரங்கால் மண்டபத்தில் பட்டாசு தொழில் அதிபர் திரு மணம் நடத்த அனுமதித் துள்ளனர். தீட்சிதர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கோவிலில் எதை செய்ய வேண்டுமானாலும் அனும திப்பார்கள் என்று இதி லிருந்து தெரிகிறது. இதற்கு எந்த ஆகமவிதி அனுமதி கொடுத்தது? எந்த தீர்ப்பு இடம் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பினார். கோவிலில் திருமணம் நடப்பது வழக்கமான ஒன்று ஆனால் மரபுகளை மீறி ஆயி ரங்கால் மண்டபத்தில் திரு மணம் நடந்தது தான் கண்டிக்கத்தக்கது. காசி விஸ்வநாதர் கோவிலில் நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் அரசு தனி சட்டம் இயற்றி கோயிலை நிர்வகித்து வரு கிறது. இது போல தமிழக அரசு தலையிட்டு இந்த கோயிலை நிர்வகிக்க வேண்டும். கோவிலுக்கு உள்ளே செல்லும் போது பக்தர்கள் தெரியாமல் காலில் செருப்பு அணிந்து சென்றால் அவர்களை மரி யாதை இல்லாமல் வசை பாடி தாக்குதலில் ஈடுபடும் தீட்சிதர்கள். இந்த செல்வந் தர்கள் செருப்பு காலுடன் ஆயிரம் கால் மண்டபத்திற்கு சென்றது தெரியாதா? இது கோயில் மட்டும் அல்ல வர லாற்று ஆய்வுக்கான பொக்கிஷமாக உள்ளது. இந்த இடத்தில் சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மனைவியை கொலை செய்த கணவன் சரண்
திருவண்ணாமலை, செப்.13- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கீழ்வன்னி யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (34). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கும் மது ரையை சேர்ந்த செல்வி (33) என்பவ ருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிறகு இருவரும் கீழ்வன்னியனூர் கிரா மத்திலேயே வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் திருவேங்கடத்தை பிரிந்து சென்ற செல்வி, சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம், உறவினர்கள் தம்பதியை சமா தானப்படுத்தி மீண்டும் ஒரே இடத்தில் வாழ வைத்துள்ளனர். இந்த நிலையில், வியாழ னன்று(செப்.13) இரவு மீண்டும் கண வன், மனைவிக்கு இடையே தக ராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோப மடைந்த திருவேங்கடம், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, செல்வியை பல இடங்களில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வி உயிரி ழந்தார். திருவேங்கடம் கலசபாக் கம் காவல்நிலையத்தில் சரண டைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.