சென்னை,மார்ச் 2- திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சனிக்கிழமையன்று (மார்ச் 2) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பேச்சு வார்த்தை நடத்த நேரம் ஒதுக்கப்பட்டி ருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றதால் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களை சந்தித்த திருமாவளவன், “கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம் முடிய தாமதமானதால் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியவில்லை. எனினும், ஓரிரு நாட்க ளில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் படும்”என்றார்.
கட்சிக் கூட்டத்தில் கூடுதல் தொகுதி களை கேட்டுப் பெற வேண்டும் என விசிக நிர்வாகிகள் வலியுறுத்தியது உண்மைதான் என்றும் அவர் தெரி வித்தார்.
எங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்ப மோ, அவசரமோ, பதற்றமோ கிடையாது. நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கி றோம். தொடர்ந்து திமுக கூட்டணி யில்தான் பயணிப்போம். இந்தத் தேர்தலை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி யில் இணைந்துதான் எதிர்கொள்வோம். அதில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஊகம் செய்துகொள்ளலாம். ஆனால், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்.
திமுக தலைமையிலான கூட்டணி யில்தான் விசிக இந்த தேர்தலை சந்திக்கும். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. சிதம்பரம் தொகுதி நான் வழக்கமாக நிற்பது. அங்கு ஐந்து முறை போட்டியிட்டுள்ளேன். அதை மீண்டும் கேட்டுப்பெறுவோம் என்று திருமாவளவன் கூறினார்.