tamilnadu

img

மாவட்டத் தலைநகரில் ஜன.4 ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச.16- காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் நியமன விதிமுறைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4 அன்று மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கே.வி.வேதகிரி நினைவகத்தில் டிசம்பர் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில  செயலாளர் ஐ. ஜம்புரூத் நிஷா  அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். வரவேற்பு குழு தலைவர் இர.நடராஜன் வரவேற்றார்.

சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேரவையை துவக்கி  வைத்து பேசினார். சங்கத்தின் பொதுச்  செயலாளர் ச.பாரி வேலை அறிக் கையையும் மாநில பொருளாளர் மா.விஜயபாஸ்கர் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

மாநிலத் துணைத் தலைவர் எம். பழனியப்பன், கவுரவத் தலைவர் மு.பரமேஸ்வரன், முன்னாள் பொதுச் செயலாளர் ந.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். பேரவையை நிறைவு செய்து தமிழ்நாடு வளர்ச்சி பணி அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் அ. கென்னடி பூபால ராயன்  உரையாற்றினார். கடலூர் மாவட்ட செயலாளர் கி. கொளஞ்சி நன்றி கூறினார்.

கருத்தரங்கம்
மாநில பிரதிநிதித்துவ பேரவையை யொட்டி  நடைபெற்ற கருத்தரங்கத் திற்கு மாநில துணைத் தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ஜெ. பாஸ்கர்  பாபு வரவேற்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பங்கேற்று  உரையாற்றினார். ‘நமது இந்தியா’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். லட்சுமண பெருமாள், ‘பொழு தெல்லாம் எங்கள் செல்வம்’  என்ற  தலைப்பில் தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் செ. முத்துக்குமாரசாமி, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ என்ற தலைப்பில் பாவலர் அறிவு மதி ஆகியோர் கருத்துறை நிகழ்த் தினார்கள். கடலூர் மாவட்ட தலைவர் க.சிகாமணி நன்றி கூறினார்.

தீர்மானம்
கிராம ஊராட்சி செயலாளர் களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை,  ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் கணினி உதவியாளர்கள் அனைவரும் பணி வரன்முறை படுத்துதல், மேம் படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் பிரித்தல் வேண்டும். இணை இயக்குநர், உதவி இயக்கு நர், உதவி பொறியாளர், ஒன்றிய பொறியாளர், பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். முதல்வரின் வாக்குறுதி படி கடந்த கால வேலை நிறுத்த நாட்களை வரன்முறை படுத்த  வேண்டும். பத்தாண்டுகள் பணி  முடித்த தொழில்நுட்ப உதவியாளர் கள், பதிவறை எழுத்தர் நிலையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த அனைவரும் பணி வரன்முறை படுத்த வேண்டும்.

நீதிமன்ற வழக்குகளை ஒருங் கிணைக்க மாவட்ட அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிடம் உருவாக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கான குடியிருப்புகளை ஒன்றிய வளாகத்திற் குள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜனவரி 4 ஆம் தேதி மாவட்ட  தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், பிப்ரவரி  6 ஆம் தேதி அன்று சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரிடம் பெருந்திரள் முறையீடு அளிக்கும் போராட்டம் நடத்துவது என்றும் இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.