1998ம் ஆண்டு பெருங்க ளத்தூர் - மதுரவாயல் (200அடி) புறவழிச்சாலை அமைக்கப் பட்டது. இதனால் அனகாபுத்தூ ரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தி யது. இதனையடுத்து 100 குடும்பங்களுக்கு (அரசாணை ஆர்சி-806/98, சர்வே எண் 288ல்) பொழிச்சலூர் ஊராட்சி, ஞான மணி நகரில் தலா 1.5 சென்ட் நிலத்தை அரசு ஒதுக்கியது. “நீர்நிலைப் பகுதியில் அரசு இடம் கொடுத்துவிட்டு அடிப்படை வசதிகள் எதையும் செய்துதரவில்லை. பாதை கூட இல்லாமல் இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர்ந்து போராட்டம் நடத்தி பாதை, குடிநீர், மின் இணைப்பு, தெரு விளக்குகள் என ஒவ்வொன்றாக கொண்டு வந்தது. கழிவு நீர் செல்லும் கால்வாயை கூட முறையாக அமைக்காமல் உள்ளனர். அரசு ஒதுக்கிய இந்த இடத்திற்க பட்டா கேட்டு 24 வருங்களாக போராடி வருகிறோம். பட்டா கொடுக்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருகின்றனர்” என்று அங்கு குடியிருக்கும் கோபால், ஸ்டாலின் தெரிவித்தனர்.