tamilnadu

“மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் உடன்பாடில்லை”: உதயநிதி ஸ்டாலின்

சென்னை,ஜன.18- சேலத்தில் வரும் 21 ஆம் தேதி  நடைபெற உள்ள திமுக இளை ஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வியாழனன்று (ஜன.18) சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த சுடர் ஓட்டம் பெத்த நாயக்கன் பாளையத்துக்கு 20 ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது, “ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம் “அதை அரசியலாக பார்க்கக்கூடாது” என்று அதிமுக கூறியுள்ள கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த உதயநிதி, “அது அவர்களுடைய கருத்தாக இருக்க லாம். திமுக எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது கிடையாது என்று கலைஞர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.

ராமர் கோவில் திறப்புக்கோ, மத  நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல. அங்கே கோயில் வருவது  எங்களுக்குப் பிரச்சனை கிடையாது.  ஆனால் அங்கே இருந்த மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்கள் பொருளாளரும் ஏற்கெனவே இது தொடர்பாக, “ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் என்றார்.