tamilnadu

img

பெண்களின் உழைப்பும் அக்கறையும் விலைமதிப்பற்றது

சென்னை, மே. 5- பெண்களின் உழைப்பும், அக்கறையும் விலைமதிப்பற்றது என்று உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தெரி வித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் இணைந்து பல்வேறு ஆளுமைகளின் சொற்பொழிவு களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் நடத்தி வருகிறது.   “பொன்மாலைப் பொழுது” என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி பிரபா ஶ்ரீதேவன் கலந்து கொண்டு பேசி னார்.

அவர் பேசுகையில், பெண்கள் வெளியில் சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் வீட்டு வேலையில் எந்த பங்களிப்பையும் செய்வ தில்லை. இந்த மனநிலை மாற வேண்டும். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மா இருக்கிறார்கள் என்று கூறு கிறார்கள். இது தவறானது. வீட்டு பொறுப்பை, வேலைகளை செய்யும் பெண்களுக்கு மாத சம்பளம் என்று  எதையும் நிர்ணயிக்க முடியாது. அவர்களின் உழைப்பும் அக்கறையும் விலைமதிப்பற்றது என்றார்.

நாட்டில் நீதித்துறையின் மீது மக்க ளுக்கு நம்பிக்கை குறைந்து வருவது வருத்த மளிக்கிறது. எல்லா இடங்களிலும் எல்லா  துறைகளிலும் நல்லவர்களும் இருக்கி றார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். மற்ற துறைகளில் இருந்தாலும் நீதித்துறை யில் இருப்பது வருத்தத்திற்குரியது. இந்த நிலை மாற வேண்டும் என்று கூறினார்.