சின்னாளப்பட்டி, மார்ச் 31- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகு தியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து சின்னாளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஞாயி றன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் அமைச்சர் பெரியசாமி பேசுகையில், ‘‘தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை ரூ.ஆயிரம் வழங்கி வருகிறது. பெறாதவர்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.3500 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. வீடு இல் லாத, நிலம் இல்லாதவர்களுக்கு உடனடியாக ரூ.4 லட்சம் மதிப்பீட் டில் வீடு கட்டிக் கொடுக்கப்படும். அதற்கான திட்டத்தை நான் ஆத்தூரில் தொடங்கி வைத்து விட்டேன்.
மேலும் சின்னாளப்பட்டியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தை நவீன வசதிகளு டன் கூடிய 24 மணி நேரமும் கூடுதல் மருத்துவர்கள் கொண்டு செயல்படும் மருத்துவமனையாக கட்டமைப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட உள்ளது. மருத்துவமனைக்கு செல்வதற் கான சாலைகள் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு விசாலமாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சின்னாளப்பட்டி பகுதியில் சாயப் பட்டறை அமைப்பதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு, இடம் தேர்வாகி உள்ளது. விரைவில் நெசவாளர்களின் துயர் துடைக்கப்படும். தேர்தலுக்குப் பின் அந்த பணிகள் தொடங்கப் படும். அதே சமயத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான நடவ டிக்கைகள் தேர்தலுக்குப் பின் முழுமூச்சாக எடுக்கப்படும்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.