tamilnadu

புழல் அருகே மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி

சென்னை, ஏப். 20- சென்னை மறைமலை நகரைச் சேர்ந்தவர்கள் ஹேமந்த் (29). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அவ ருடைய நண்பர் குகன்ராஜ் (26) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

 இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் சனிக்கிழமை அதி காலை மறைமலை நகரில் இருந்து ஹேமந்தின் இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடியில் உள்ள குகன் ராஜ் உறவினரை சந்திப்பதற்கு தாம்பரம் புழல் பைபாஸ் சாலை வழி யாக சென்று கொண்டிருந்தனர். புழல் பைபாஸ் மேம்பாலத்தின் இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலைதடுமாறி பக்கவாட்டு சுவரில் மோதியது. இதில் இருவரும் சுமார் 50 அடிக்கு கீழே உள்ள அனுகு சாலையில் விழுந்தனர்.

 இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அங்கி ருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்சில் இருந்த செவிலியர் அவர்களை பரிசோதனை செய்த போது அதில் ஹேமந்த் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது தெரியவந்தது. படு காயமடைந்த குகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை   பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பொதுமக்கள் கோரிக்கை
இந்த இடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் உயிரி ழப்பு ஏற்படுவதுடன் பலர் காய மடைகின்றனர். எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி விபத்து நடைபெறாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.